Tuesday, May 7, 2024
- Advertisement -
Homeசினிமாரம்பாவிடம் அத்துமீறிய ரஜினி.. லைட் ஆப் ஆனதும் பின்னாடி தட்டினார்!

ரம்பாவிடம் அத்துமீறிய ரஜினி.. லைட் ஆப் ஆனதும் பின்னாடி தட்டினார்!

தமிழ் சினிமாவில் உள்ளத்தை அள்ளித்தா ,தர்மசக்கரம், சுந்தர புருஷன் ,நினைத்தேன் வந்தாய் ,அருணாச்சலம் ,மின்சாரக் கண்ணா, மிலிட்டரி ,ஆனந்தம் போன்ற பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரம்பா.

- Advertisement -

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ,ஹிந்தி, கன்னடம், மலையாளம் போன்ற எல்லா மொழிகளிலும் முதன்மையான கதாநாயகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 90ஸ் மட்டும் 80களில் ஃபேவரட் ஹீரோயின் லிஸ்டில் இடம் பிடித்தவர் நடிகை ரம்பா.

இவர் 2010 ஆம் ஆண்டு பெண் சிங்கம் என்ற திரைப்படத்தின் கடைசியாக நடித்திருந்தார். அதற்குப் பிறகு இவர் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை .திருமணம் குழந்தைகள் என குடும்பப்பாங்கான பெண்ணாக தன் வாழ்வை நடத்திக் கொண்டிருந்தார் நடிகை ரம்பா.

- Advertisement -

இவர் தற்பொழுது ஒரு பேட்டியில் தன் வாழ்வில் சினிமாவில் நடித்த போது நடந்த அனுபவங்களை பற்றி பகிர்ந்திருந்தார். அதில் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடித்த போது நடந்த அனுபவங்களை பற்றி கூறியது சர்ச்சைக்கு உள்ளாக இருக்கிறது.

- Advertisement -

1997-ல் நடிகை ரம்பா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் அருணாச்சலம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் இந்த திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரமாக இருந்தாலும் கதாநாயகியாக நடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின் நடந்த அதே நேரத்தில் பந்தன் என்ற திரைப்படத்தில் ஹிந்தி நடிகர் சல்மான்கான் உடன் நடித்துக் கொண்டிருந்தார் நடிகை ரம்பா.

இரண்டு திரைப்படங்களும் பாம்பேயில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பு நடந்து வந்தது.அந்த நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பார்ப்பதற்கு நடிகர் சல்மான் கான், ஜாக்கி ஷெரிஃப் போன்ற பிரபலங்கள் அருணாச்சல திரைப்படத்தின் படப்பிடிப்பிடத்திற்கு வந்திருக்கிறார்கள்.

அப்போது நடிகை ரம்பா அவர்களைக் கண்டதும் மகிழ்ச்சியில் ஓடி சென்று கட்டிப்பிடித்து வரவேற்று இருக்கிறார்.
இதைக் கண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிகவும் ஆவேசம் அடைந்திருக்கிறார். நார்த் இந்தியன் நடிகர்கள் என்றால் கட்டிப்பிடித்து வரவேற்பீர்களா? எங்களைப்போல் சவுத் இந்தியன் நடிகர்கள் என்றால் உங்களுக்கு இளக்காரமா என்று கோபம் கொண்டார் என்று நடிகை ரம்பா அந்த நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் ஷூட்டிங்கில் விளக்குகள் அனைந்திருக்கும் அந்த நேரத்தில் தன் முதுகுக்கு பின்னால் யாரோ தட்டி விட்டு சென்றது போல் உணர்ந்த ரம்பா திடீரென்று கத்தி இருக்கிறார். அதற்குப் பிறகு அவ்வாறு செய்தது யார் என்று விசாரித்த பொழுது அதை செய்ததும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் என்பதும் தெளிவாக இருக்கிறது.

இது போன்ற விஷயங்களை பகிர்ந்து இருந்தார் நடிகை ரம்பா. இதுபோல் அவர் கூறிய விஷயங்களை சூப்பர் ஸ்டாரின் ஹீட்டர்ஸும், நெட்டிசன்களும் மீம்ஸ்களும், ட்ரோல்ஸ்களும் கிரியேட் செய்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை விமர்சித்து வருகிறார்கள்.

Most Popular