Entertainment

”கொரோனா குமார்” சிம்புக்கு ஜோடியாக நடிக்க ஓகே.. பிரதீப் ரங்கநாதனுக்கு ”நோ”.. அதிதி ஷங்கர் எடுத்த முடிவு..!

லவ் டுடே படத்திற்கு பின்னர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் அடுத்த படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க அதிதி சங்கர் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லவ் டுடே படத்திற்கு பின்னர் பிரதீப் ரங்கநாதன் பிசியாக அடுத்தடுத்து நடித்து வருகிறார். சிம்பு நடிப்பதாக இருந்த கொரோனா குமார் படத்தில் பிரதீப் ஹீரோவாக நடிக்கலாம் என தகவல் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக யார் நடிக்கப்போவது என்ற எதிர்பார்ப்பு எழுந்து வந்தது.

இந்தநிலையில் விருமன் படத்தில் நடித்து பிரபலமான அதிதி சங்கர், பிரதீப் ரங்கநாதனுடன் நடிக்கலாம் என தகவல் வெளியானது. ஆனால் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து நடிக்க அதிதி சங்கர் தயங்குவதாக கூறப்படுகிறது. அதேநேரம் இந்த படத்தில் நடிக்க மறுத்தால் தன்னுடைய கேரியரில் இது மைனஸலான ஒன்றாக மாறிவிடும் என யோசித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

Advertisement

ஏகே 62 படத்தில் இருந்து விலகிய விக்னேஷ் சிவன், அடுத்து பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து படம் ஒன்றை இயக்க முடிவு செய்துள்ளார். இந்த படத்தில் நயன்தாராவை பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து நடிக்க கேட்டுக்கொண்டுள்ளார். தனது கணவருக்காக பிரதீப் ரங்கநாதனுடன் நடிக்க முடிவு செய்துள்ளார் நயன்தாரா.

தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நயன்தாரா, பிரதீப்புடன் நடிக்க சம்மதம் தெரிவித்த நிலையில், அதிதி சங்கர் மட்டும் ஏன் தயக்க காட்டுகிறார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஐசரி கணேஷ் தயாரிப்பில் சிம்பு நடிக்கவிருந்த படம் கொரோனா குமார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் புகழ் கோகுல் இயக்குநராக கமிட் ஆன இந்தப்படத்தில் இருந்து சிம்பு விலகினார். தற்போது கொரோனா குமார் படத்தில் சிம்புவுக்கு பதிலாக பிரதீப் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top