Thursday, May 16, 2024
- Advertisement -
HomeEntertainmentபைக்கை தூக்கி எறிந்துவிட்டு சைக்கிளில் ஜாலியாக ரவுண்டு வரும் ஏ.கே…. அவர யாராச்சும் கன்ட்ரோல் பண்ணுங்கப்பா…...

பைக்கை தூக்கி எறிந்துவிட்டு சைக்கிளில் ஜாலியாக ரவுண்டு வரும் ஏ.கே…. அவர யாராச்சும் கன்ட்ரோல் பண்ணுங்கப்பா… ப்ளீஸ்…

வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என சிறுத்தை சிவாவுடன் தொடர்ந்து நான்கு படங்களில் நடித்தார் அஜித்குமார். அடுத்ததாக, ஹெச்.வினோத்திடம் சென்ற அவர், நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களில் நடித்தார். இவருடைய அடுத்த படத்தை, லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால், தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட மன கசப்பால் அவர் விலக, அந்த வாய்ப்பை பற்றிக்கொண்டார் இயக்குநர் மகிழ் திருமேனி.

- Advertisement -

கடந்த மே மாதம் 1-ம் தேதி அஜித் பிறந்தநாளை முன்னிட்டு இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள், அஜித்துடன் மகிழ் திருமேனி இணைவது வேறொரு ரகத்தில் இருக்கும் என்று இணையத்தில் கலக்கினர். அத்துடன் தங்கள் தலயை புதுவித கோணத்தில் பார்ப்பதாக ஆசைப்படுவதாகவும், அதற்கு மகிழ் திருமேனி ஏற்றவர்தான் என்றும் கூறி மகிழ்ந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி சிறிது நேரம் கூட தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு, விடாமுயற்சி எனும் டைட்டிலை அறிவித்தது படக்குழு.

என்ன, இந்த படத்திலும் வி சென்டிமென்ட் தானா என உச்சு கொட்டிய ரசிகர்கள், இந்த டைட்டில் அந்தளவு எடுப்பாக இல்லை என குறை கூறி வந்தனர். இது ஒரு பக்கமிருக்க, விடாமுயற்சிக்கான அடுத்த கட்ட அப்டேட்களும் வெளியாவதில் மிக தாமதம் ஏற்பட்டது. படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்துவிட்டு கால்கடுக்க மகிழ் திருமேனி காத்திருக்க, எதையும் காதில் வாங்கி கொள்ளாமல் அஜித் பைக் டூர் சென்றிருப்பதாக நடிகருக்கு எதிர்தரப்பினர் கூறி வந்தனர்.

- Advertisement -
Ajith

திரைப்படங்களை தாண்டி நடிகர் அஜித், தனது சொந்த வாழ்க்கையில் பிடித்தமான தருணங்களை அனுபவிக்கக் கூடாதா என்று அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்ப, இணையத்தில் வார்த்தை போர் முற்றியது. இருப்பினும், மே மாதம் படத்தின் அறிவிப்பு வெளியாக, அதன்பிறகு ஒரு அப்பேட்டும் கிடைக்காததால் ஒரு வேளை படம் நிறுத்தப்படுகிறதா என்ற கேள்வியும் எழ ஆரம்பித்தது.

- Advertisement -

இதனிடையே பைக் டூரை முடித்துவிட்டு சென்னைக்கு திரும்பிய அஜித்தை, ரசிகர்கள் சூழ்ந்து கொண்ட வீடியோவும் சமீபத்தில் வெளியானது. அத்துடன் விடாமுயற்சியின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழாவில் லைகா நிறுவனத்தைச் சேர்ந்த சுபாஷ்கரன் அறிவித்ததால் உற்சாகத்தில் மிதந்தனர் ஏ.கே.ரசிகர்கள்.

இனி தங்கள் தல சூட்டிங் போய்விடுவார் என அவர்கள் கனவு கொண்டிருக்க, அஜித்தோ சைக்கிளை கையில் எடுத்திருக்கிறார். சென்னையில் அவர் சிலருடன் சைக்கிள் ஓட்டிய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. என்னது, நம்ம தல பைக்கை விட்டுட்டு சைக்கிளுக்கு போய்ட்டாரா என கவலையில் இருக்கும் ஏ.கே. ரசிகர்கள், அவர் சூட்டிங் கிளம்புவதற்காக காத்திருக்கின்றனர்.

Most Popular