Friday, April 26, 2024
- Advertisement -
HomeEntertainmentதமிழ், இந்தியைத் தொடர்ந்து தெலுங்கிற்கு தாவும் அட்லி… அதுவும் இந்த நடிகருடனா… அங்க பர்னிச்சர உடைச்சது...

தமிழ், இந்தியைத் தொடர்ந்து தெலுங்கிற்கு தாவும் அட்லி… அதுவும் இந்த நடிகருடனா… அங்க பர்னிச்சர உடைச்சது எல்லாம் பத்தாதா என உச்சு கொட்டும் நடிகரின் விசிறிகள்

தமிழ் சினிமாவில் நான்கு படங்களை இயக்கிய அட்லி, தற்போது பாலிவுட்டில் ஜவான் திரைப்படம் மூலம் வெற்றி கொடி நாட்டியுள்ளார். தொடக்கத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து குறும்படங்களை இயக்கிய அட்லி, அதன்மூலம் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராகும் வாய்ப்பை பெற்றார்.

- Advertisement -

எந்திரன், நண்பன் திரைப்படங்களில் உதவி இயக்குநரனாக பணிபுரிந்த அட்லிக்கு, முதல் முறையாக ராஜா ராணி திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்து. ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா, ஜெய் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம், மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. முதல் திரைப்படத்திலேயே தான் யார் என நிரூபித்ததால், இயக்குநர் அட்லி புகழின் உச்சத்திற்கு சென்றார். அடுத்ததாக அவருக்கு விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய்க்கு போலீஸ் ஸ்டோரியை தயார் செய்த அட்லி, தெறி படத்தை கொடுத்து ரசிகர்களுக்கு விருந்தளித்தார். பின்னர், முதல் முறையாக விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்க, மெர்சல் திரைப்படமும் மெர்சலாக இருந்தது. இதையடுத்து, விஜய் – அட்லி கூட்டணியில் மூன்றாவது திரைப்படமாக பிகில் உருவாகி வெற்றி பெற்றது.

- Advertisement -

தளபதியுடன் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்ததால் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார் அட்லி. 2019ம் ஆண்டில் பிகில் வெளியாக அதன்பிறகு அட்லி அடுத்தப்படம் என்னவாக இருக்கும் என கேள்வி எழுந்தது. இதற்கெல்லாம் விடை கொடுக்கும் வகையில் பாலிவுட் நட்சத்திரம் ஷாரூக்கானுடன் அவர் இணைந்தார். நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, ப்ரியா மணி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே நடிக்க ஜவான் ரெடியானது. இந்த படத்தை ஷாரூக்கானின் மனைவி கெளரி தயாரித்துள்ளார்.

- Advertisement -

கடந்த வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் வெளியான ஜவான் திரைப்படம், கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. குறிப்பாக, எல்லா திரைப்படங்களிலும் பிற படங்களின் சீனை காப்பியடிக்கும் அட்லி, இந்தமுறை தனது மெர்சல் திரைப்படத்தையே காப்பியடித்திருப்பதாக ரசிகர்கள் கடுப்புடன் கூறி வருகின்றனர். 1989ம் ஆண்டு வெளியான சத்யராஜின் தாய்நாடு படம் முதல், இந்தியன், ரமணா, கத்தி, சர்கார், ஆரம்பம் என ஏகப்பட்ட படத்தின் காட்சிகள் இதில் இருப்பதாக சலிப்புடன் கூறுகின்றனர்.

இப்படி அனைத்து படத்தின் காட்சிகளையும் உருவி விட்டு, எப்படி அவர் மேடையில் உதார் விடுகிறார் என்றும், எழுத்து – இயக்கம் அட்லி என எழுதுவதற்கு எப்படி மனம் வருகிறது எனவும் அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். திரைக்கதை நன்றாக வருகிறது என்றால், அதை மட்டும் செய்ய வேண்டியது தானே, எதற்கு அடுத்தவர்களின் கதையை காப்பியடிக்க வேண்டும் என்றும் அட்லியை வறுத்தெடுத்து வருகின்றனர்.

இதனால் தமிழில் ஜவானுக்கு வரவேற்பு குறைவாகவே உள்ளது. அதேசமயம், இந்தியில் படம் வேறு லெவலில் ரீச் ஆகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு நாட்களில் மட்டும் ஜவான், 240 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அட்லியின் அடுத்தப்படம் குறித்த தகவல் கசிந்துள்ளது. தமிழ், இந்தி திரையுலகை பார்த்த அவர், அடுத்ததாக தெலுங்கு பக்கம் தாவ இருக்கிறாராம்.

இதில் நாயகனாக புஷ்பா புகழ் அல்லு அர்ஜூன் நடிப்பதாகவும், அனிருத்தே இதற்கு இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் பேட்டியளித்த அட்லி, தனது மகன் மீருடன் நேரத்தை செலவு செய்ய முடிவு செய்திருப்பதாகவும், மூன்று மாதங்கள் அவனுடன்தான் இருப்பேன் என்றும் கூறியிருந்தார். இதனால், அல்லு அர்ஜூன் – அட்லி இணையும் திரைப்படத்தின் வேலைகள் அடுத்த ஆண்டே தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular