Saturday, April 27, 2024
- Advertisement -
HomeEntertainmentமுடிவடைந்த தங்கலான் படப்பிடிப்பு.. அடுத்தது என்ன? யார் படத்தில் விக்ரம் நடிக்கிறார் தெரியுமா?

முடிவடைந்த தங்கலான் படப்பிடிப்பு.. அடுத்தது என்ன? யார் படத்தில் விக்ரம் நடிக்கிறார் தெரியுமா?

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில்  உருவாகி உள்ள தங்கலான் படபிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. பொன்னியின் செல்வன் 2 வை தொடர்ந்து விக்ரம் நடித்த படம் தங்கலான் படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன் மற்றும் பசுபதி ஆகியோர் நடித்துள்ளனர்.

- Advertisement -

நிறைவடைந்த படப்பிடிப்பு

இதன் படப்பிடிப்பு KGF மற்றும் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. அண்மையில் மதுரையின் மலைப்பகுதிகளில் நடந்த படப்பிடிப்பின் புகைப்படங்களை மாளவிகா மோகனன் பதிவிட்டிருந்தார். இந்தப் படத்திற்கான இசை மற்றும் கிராஃபிக்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இப்படம் கர்நாடக மாநிலத்தில உள்ள  கேஜிஎப் பற்றிய கதை என்று தெரிய வந்துள்ளது.

மிரட்டலான மேக்கிங் வீடியோ

ஏற்கனவே விக்ரம் பிறந்தநாளன்று வெளியிடப்பட்ட மேக்கிங் வீடியோ ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. வெவ்வேறு லுக்குகளில் நடிகர் விக்ரம் மிரட்டலான நடிப்பை வெளியிட்டிருந்தார். தற்போது படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் விக்ரம் சமூகவலைதளங்களில்  தங்கலான் படபிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைபடங்களை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -
Chiyaan Vikram 61

அதுமட்டுமல்லாம, என்ன ஒரு பயணம். மிகவும் அற்புதமான சிலருடன் பணிபுரிந்ததில் ஒரு நடிகராக மிகவும் உற்சாகமான சில அனுபவங்களை பெற்றேன். முதல் மற்றும் கடைசி புகைபடத்திற்க்கு இடையே 118 நாட்கள் படபிடிப்பு நடைபெற்றது. இந்த கனவை வாழ வைத்ததற்கு நன்றி ரஞ்சித் குறிப்பிட்டிருந்தார்.

- Advertisement -

நம்பிக்கையாக இருக்கும் விக்ரம்

தங்கலான் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், விக்ரம் அடுத்ததாக எந்த படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. துருவ நட்சத்திரம் படத்திற்கான பணிகளை முடித்து கொடுத்துள்ள விக்ரம், அடுத்ததாக நிறைய கதைகளை கேட்டு வருகிறார். ஆனால் இதுவரை எதையும் முடிவு செய்யவில்லை.

Chiyaan Vikram

தங்கலான் மற்றும் துருவ நட்சத்திரம் படம் நிச்சயம் வெற்றியடையும் என்று விக்ரம் நம்பிக்கையாக இருக்கிறார். இதனால் அடுத்தப் படத்தை தனது நடிப்புக்கு தீனி போடுவதோடு, சிறந்த கதையாகவும் இருக்க வேண்டும் என்று விக்ரம் எண்ணுகிறார். இதனால் சிறந்த கதை அமைவதற்காக காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Most Popular