Sunday, April 28, 2024
- Advertisement -
HomeEntertainmentதேசிய விருது வென்ற முதல் தெலுங்கு நடிகர்.. ஆனந்த கண்ணீரில் அல்லு அர்ஜூன்.. சுகுமாரை கட்டித்தழுவி...

தேசிய விருது வென்ற முதல் தெலுங்கு நடிகர்.. ஆனந்த கண்ணீரில் அல்லு அர்ஜூன்.. சுகுமாரை கட்டித்தழுவி கொண்டாட்டம்!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜூன். 25வது படமான டிஜே படத்தின் தோல்விக்கு பின், அல்லு அர்ஜூன் நீண்ட ஆண்டுகளாக ஓய்வில் இருந்தார். இதன்பின் அலவைக்குந்தபுரமலோ படத்தின் மூலம் மிரட்டல் கம்பேக்கை கொடுத்தார். இந்தப் படம் தெலுங்கு மாநிலங்களில் மட்டும் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.

- Advertisement -

இதன்பின் ஆர்யா மற்றும் ஆர்யா 2 படங்களை இயக்கிய சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். புஷ்பா என்ற தலைப்பிடப்பட்ட படத்தில் செம்மரக் கடத்தலை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டது. அதில் ராஷ்மிகா மந்தனா, சுனில், ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்தனர்.

செம்மரக் கடத்தலின் மன்னனாக புஷ்பா எப்படி மாறினார் என்று புஷ்பா முதல் பாகத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டது. இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்யப்பட்டது. ரிலீஸ் செய்யப்பட்ட அத்தனை இடங்களிலும் புஷ்பா வசூல் சாதனை படைத்தது.

- Advertisement -
Pushpa 2

ரூ.500 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்ய, புஷ்பா 2 படத்திற்காக அல்லு அர்ஜூன் காத்திருந்தார். இதன் படப்பிடிப்பு தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சிறந்த நடிகருக்கான விருது அல்லு அர்ஜூனுக்கு புஷ்பா படத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன் மூலம் தெலுங்கு சினிமாவில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது வென்ற நடிகர் என்ற சாதனையை அல்லு அர்ஜூன் படைத்துள்ளார். இந்த விருது அறிவிக்கப்பட்டதால், அல்லு அர்ஜூன் ஆனந்த கண்ணீரை வெளிப்படுத்தினார். இதனால் இயக்குநர் சுகுமாரை நீண்ட நேரம் கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவரை சுற்றி நண்பர்கள், குடும்பத்தினர் பலரும் உணர்ச்சிப் பெருக்கில் இருந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Most Popular