Friday, May 3, 2024
- Advertisement -
HomeEntertainmentவாடிவாசல் திரைப்படத்தில் அமீரை ஒப்பந்தம் செய்ய காரணமே வேற.. உறுதிப்படுத்திய வெற்றிமாறன்… ஷூட்டிங் எப்போது?

வாடிவாசல் திரைப்படத்தில் அமீரை ஒப்பந்தம் செய்ய காரணமே வேற.. உறுதிப்படுத்திய வெற்றிமாறன்… ஷூட்டிங் எப்போது?

பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் என தான் எடுத்த அத்தனை திரைப்படங்களையும் வெற்றி திரைப்படங்களாக மாற்றியவர் இயக்குனர் வெற்றிமாறன். இதில் ஆடுகளம் திரைப்படத்திற்காக தனுஷ் தேசிய விருதை பெற்றார். அதேபோல் அவரின் அசுரன் திரைப்படமும் தேசிய விருதை பெற்றது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து நடிகர் சூர்யாவுடன் வெற்றிமாறன் இணைவதாக அறிவிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்த திரைப்படத்திற்கு வாடிவாசல் என்று தலைப்பிடப்பட்டது. கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டதில் இருந்தே அதன் மீதான பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்து வந்தது. இருவரும் எப்போது இணையப் போகிறார்கள் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர்.

இதை தொடர்ந்து சூர்யாவும் களத்தில் இறங்க, போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் சூடு பிடித்தன. காளைகளுடன் களத்தில் இறங்கிய சூர்யா, அதனுடன் ஜல்லிக்கட்டு விளையாடி படத்திற்கு தயாராகி வந்தார். சிறு நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்படுவது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். இதில் சூரி நடிப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் கால்ஷீட் பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால், இருவரும் இணைவதில் தாமதம் ஏற்பட்டது.

- Advertisement -

இந்த இடைவெளியில் விடுதலைப் படத்தை இயக்க முடிவு செய்தார் வெற்றிமாறன். சூரியன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி உள்ளிட்ட நட்சத்திரங்கள் இடம் பெற படம் தயாரானது. ஆனால் சூட்டிங் சென்றதும் படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க வெற்றிமாறன் முடிவு செய்தார். அதன்படி முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் இரண்டாம் பாகத்தை வெற்றிமாறன் இப்போது இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் வெற்றிமாறன் மற்றும் அமீர் ஆகியோர் தயாரித்திருக்கும் மாயவலை திரைப்படத்தின் விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய வெற்றிமாறன், வாடிவாசல் திரைப்படத்தில் அமீர் இருப்பதை உறுதி செய்தார். முதலில் அமீரை சந்தித்து வடசென்னை படத்தில் நடிக்க கூறினேன். இதனால் எங்கள் உறவு மூன்று நாட்கள் கூட நீடிக்காது என்று பலரும் தெரிவித்தனர். ஆனால் இப்போது வரை நாங்கள் நண்பர்களாக இருக்கிறோம். அமீர் மதுரைக்காரர் என்பதால் எப்போதும் எனக்கு உறுதுணையாக இருப்பார் என்று தெரிவித்தார். இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு, அடுத்த ஆண்டு பிற்பாதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular