Monday, April 29, 2024
- Advertisement -
HomeUncategorizedரசிகர்களுக்கு விருந்து படைக்க இன்னொரு “காதல் கொண்டேன்” வர உள்ளது -? -இயக்குனர் செல்வராகவன் பதிவு

ரசிகர்களுக்கு விருந்து படைக்க இன்னொரு “காதல் கொண்டேன்” வர உள்ளது -? -இயக்குனர் செல்வராகவன் பதிவு

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர், தற்பொழுது அதிகம் நடிகராகவும் அறியப்பட்டவர். திரைத்துறையில் அவருக்கான தனி முத்திரையை பதித்தவர் இயக்குனர் செல்வராகவன்.

- Advertisement -

இயக்குனர் மற்றும் நடிகர் செல்வராகவன் இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன் ஆவார். இவர் ஆரம்ப காலத்தில் தன்னுடைய தம்பியை வளர்ப்பதற்காகவே திரைப்படங்களை இயக்கினார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே அந்த வகையில் அவர் இயக்கிய ஆரம்பக் கால படங்கள் அனைத்தும் அவருக்கு வெற்றி படங்களாக அமைந்து அவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.

இவருடைய இளமைக்காலம் மிகவும் மோசமானதாக அமைந்தது இவருக்கு விழித்திரை புற்றுநோய் இருப்பதால் அவருடைய ஒரு கண் சிறு வயதிலேயே அகற்றப்பட்டது. ஆனாலும் தன்னுடைய விடா முயற்சி மற்றும் தன்னம்பிக்கையால் இன்று வரை தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நபராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -

துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகத்திற்கு இயக்குனராக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார் இயக்குனர் செல்வராகவன். தொடர்ந்து காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை ஆயிரத்தில் ஒருவன் என்ற அனைத்து படங்களும் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது இந்த படங்களில் அனைத்தும் அந்த நேரங்களில் பேசப்படாமல் போனாலும் தற்போது அந்த படங்கள் அதிகமாக பேசப்பட்டு அவருக்கு உள்ள நட்பையரை இன்னும் அதிகப்படுத்தி வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் சமூக வலைதளத்தில் ரசிகர் பதிவு செய்த பதவிக்கு இயக்குனர் செல்வராகவன் அளித்த பதில் அனைவரையும் மகிழ்ச்சியில் திகைக்க வைத்துள்ளது. அந்த பதிவில் ரசிகர் ஒருவர், தொலைக்காட்சியில் காதல் கொண்டேன் திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போது அந்த காட்சியை பதிவு செய்து “விவேக் ஒரு காமெடி யில் சொல்லுவார் இயக்குனர்
ஒவ்வொரு பிரேமும் செத்துகிருக்கார் அப்பிடி ஒரு படம் இது , அப்படி ஒரு இயக்குனர் செல்வராகவன் அது ஒரு காலம் ” இன்றைய பதிவு செய்திருந்தார் இந்த பதிவிற்கு இயக்குனர் செல்வராகவன் பதில் அளித்திருந்தார்.

அந்த பதில் அவர் கூறியிருப்பது “ஏன் நண்பரே? நான் இறக்கவில்லை அல்லது ஓய்வு பெறவில்லை. நான் எனக்காகவே சிறிது நேரம் செலவிட்டுள்ளேன். நான் நாற்பதுகளில் இருக்கிறேன். நான் திரும்பி வந்துவிட்டேன்” என்று அவரது பதிவிற்கு பதில் அளித்து இருந்தார்.

இதன் மூலம் நாம் அனைவரையும் இன்னொரு “காதல் கொண்டேன் ”நம்மை எல்லாம் கட்டிப் போட வர இருக்கிறது என்பதை நம்மால் அறிய முடிகிறது.

Most Popular