Friday, March 29, 2024
- Advertisement -
HomeEntertainmentஅருண் விஜய் நடிப்பில் பரபரப்பாக நடந்த வணங்கான் ஷூட்டிங்.. முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த இயக்குநர் பாலா.....

அருண் விஜய் நடிப்பில் பரபரப்பாக நடந்த வணங்கான் ஷூட்டிங்.. முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த இயக்குநர் பாலா.. நிம்மதியில் படக்குழு!

நடிகர் சூர்யா நடிப்பு மற்றும் தயாரிப்பில் இயக்குநர் பாலா 18 ஆண்டுகள் கழித்து வணங்கான் படத்தின் மூலம் இணைந்திருந்தனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் கன்னியாகுமரியை சுற்றியுள்ள இடங்களில் 35 நாட்கள் நடத்தப்பட்டது. இதையடுத்து கோவாவில் அடுத்தக்கட்ட ஷூட்டிங் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் காரணம் எதுவும் கூறாமல் திடீரென நிறுத்தப்பட்டது.

படத்தின் ஷூட்டிங்கின்போது சூர்யா மற்றும் பாலா இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இந்தப் படம் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் பாலா மற்றும் சூர்யா தரப்பு இதுகுறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. மாறாக இந்தப் படம் நிறுத்தப்பட்டதாக பாலா தெரிவித்தார். இதையடுத்து இந்தப் படம் மீண்டும் துவங்குமா யாரை வைத்து பாலா வணங்கான் படத்தை எடுப்பார் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் வெளியாகின.

இதனிடையே நடிகர் அருண் விஜய், பாலா இயக்கத்தில் தற்போது வணங்கான் படத்திற்காக இணைந்துள்ளார். இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தப் படத்தின் ஷூட்டிங் கன்னியாகுமரியில் தொடங்கப்பட்டு தற்போது முதல்கட்ட ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. படத்தில் அருண் விஜய்க்கு ரோஷினி பிரகாஷ் நாயகியாகியுள்ளார். சமுத்திரக்கனி முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையில் வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.

படத்தின் ஸ்டண்ட் மாஸ்டராக சில்வா இணைந்துள்ள நிலையில், படத்தில் ஆக்ஷன் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அடுத்தக்கட்டமாக ஏப்ரல் 17ம் தேதி திருவண்ணாமலையில் படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் துவங்கவுள்ளதாக படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்து படத்தை ரிலீஸ் செய்ய பாலா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

Most Popular