Monday, May 6, 2024
- Advertisement -
HomeEntertainmentபாலிவுட் நடிகை கிறிஸன் பெரேராவுக்கு சிறை.. கடத்தல் வழக்கில் கைது.. நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி...

பாலிவுட் நடிகை கிறிஸன் பெரேராவுக்கு சிறை.. கடத்தல் வழக்கில் கைது.. நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி முன்விரோதத்தை தீர்த்த கும்பல்!

பாலிவுட் நடிகையான கிறிசன் பெரேரா, பாட்லா ஹவுஸ், சடக் மற்றும் திங்கிஸ்டன் போன்ற படங்களில் நடித்துள்ளார். அதேபோல் ஏராளமான வெப் சீரிஸ்கள், போஜ்பூரி படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகை கிறிசன் பெரேரா சர்வதேச வெப் சீரிஸில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்துள்ளது. இதையடுத்து, மும்பையில் நடைபெற்ற பல கட்ட தேர்வுகளுக்குப்பிறகு ‘ஆடிஷனுக்காக’ துபாய்க்கு அனுப்பப்பட்டுள்ளார்.

- Advertisement -

ஆடிஷனில் பயன்படுத்த வேண்டும் என்று அவரிடம் கோப்பை ஒன்று சில நபர்களால் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த கோப்பையில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை விமான நிலைய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து, ஷார்ஜா விமான நிலைய போலீஸாரால் ஏப்ரல் 1ம் தேதி கிறிஸன் பெரேரா கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணை மேற்கொண்ட போது, ஐந்து பேர் பிடிபட்டுள்ளனர். மூன்று பேர் துபாயிலிருந்து மும்பை திரும்பிய போது மும்பை போலீசாரிடம் சிக்கியுள்ளனர். கிறிஸன் பெரேரா உட்பட இருவர் ஷார்ஜாவில் கைது செய்யப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஐந்து பேருக்கும் போதை மருந்து கடத்தல் குறித்து எதுவுமே தெரியவில்லை என்பதும், அவர்கள் வேண்டுமென்றே சிக்க வைக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

- Advertisement -

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், போதை பொருள் வழக்கில் தொடர்புடைய அந்தோணி பால் மற்றும் ரவி ஆகியோர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கும் பாலிவுட் நடிகை கிறிசன் பெரேராவின் தாயாருக்கும் அந்தோணி பாலுக்கும் நாய் வளர்ப்பதில் சில மாதங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது தாயாரை பழிவாங்க நினைத்த அந்தோணி பால், ரவியை பயன்படுத்தி கிறிசன் பெரேராவிற்கு தெரியாமல் கோப்பையில் போதை பொருளை வைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Most Popular