சினிமா

திருச்சிக்கு வந்த அஜித்.. ரசிகர்கள் கூட்டம் அலைமோதல்.. போலீஸ் தடியடி!

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார் . நடிகர் அஜித் சினிமா மீது மட்டும் காதல் கொண்டவர் அல்ல, அவருக்கு பைக் ரைட், போட்டோகிராபி, ட்ரோன், கார் பந்தயம் என பல்வேறு துறைகளில் காதல் கொண்டவர். இதற்காக தனது வாழ்க்கையில் சில நாட்களை அஜித் கழித்து வருகிறார். நடிகர் அஜித்துக்கு தேடல் என்பது எப்போதுமே இருக்கும் இந்த நிலையில் தான் நடிகர் அஜித் துப்பாக்கி சுடுதல் மீது ஆர்வம் வந்தது. இதற்காக சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டு வந்த அஜித் தற்போது துப்பாக்கி சூடு போட்டிகளிலும் பங்கேற்றும் வருகிறார்.

Advertisement

இந்த நிலையில், அஜித்குமார் தல 61 படத்தில் நடித்து வந்தார். ஆனால் படப்பிடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் ஐரோப்பிய கண்டத்திற்கு சென்று விடுமுறையை கழித்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் அஜித் சென்னை வந்தார். இதனால் அஜித் எச் வினோத் கூட்டணியில் உருவாகும் தல 61 படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடிகர் அஜித் படப்பிடிப்புக்கு செல்லாமல் திடீரென்று துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்க சென்றுவிட்டார்.

திருச்சியில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடும் போட்டிக்காக அஜித் இன்று காலை வந்தார். அஜித் வந்துள்ள செய்தியை அறிந்த ரசிகர்கள் போட்டி நடைபெறும் இடம் முன் அதிக அளவு குவிந்தனர். இதனை சற்று எதிர்பாராத அஜித் போட்டி நடைபெறும் கட்டடத்தில் மீது ஏறி நின்று ரசிகர்களுக்கு கை அசைத்து நன்றி தெரிவித்தார். அஜித்தை பார்த்ததும் உற்சாகம் அடைந்த ரசிகர்கள் நடனமாட தொடங்கினர் .ஒரு சிலர் வருங்கால முதலமைச்சர் என்று அஜித்தை பார்த்து கோஷமும் போட்டனர்.

Advertisement

நிலைமை கட்டுக்குள் கொண்டுவர அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அஜித் ரசிகர்கள் மீது லேசான தடியடி நடத்தினர். அப்போது அதனை கண்ட அஜித் போலீசாரிடம் அடிக்க வேண்டாம் என்று சைகையில் காட்டினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top