Tuesday, April 30, 2024
- Advertisement -
HomeUncategorized18 ஆண்டுகளுக்குப் பிறகு திரையுலகில் சந்திரமுகி பொம்மி...இப்போ எப்படி இருக்கார் தெரியுமா?

18 ஆண்டுகளுக்குப் பிறகு திரையுலகில் சந்திரமுகி பொம்மி…இப்போ எப்படி இருக்கார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படங்களில் ஒன்று சந்திரமுகி. இப்படத்தில் நயன்தாரா, பிரபு,ஜோதிகா, நாசர் வினித் மற்றும் வைகைப்புயல் வடிவேலு நடித்து பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும்   கவர்ந்தது.

- Advertisement -

இப்படத்தில் காட்சிகள் ஒவ்வொன்றும் குழந்தைகளை குஷிப்படுத்தியது .அதும் இப்படத்தின் பாடல்களும் குழந்தைகள் விரும்பும் வகையில் அத்திந்தோம், பட்டம் பர பர, என்று அவர்கள் பாடும் வண்ணம் சிறப்பாக அமைந்தது..


வைகைப்புயல் வடிவேலும், ரஜினியும் சேர்ந்து செய்யும் நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் அனைவருக்கும் பிடிக்கும்.
இப்படத்தில் நயன்தாராவிடம் பாட்டு கற்றுக்கொள்ள அரண்மனைக்கு சிறுவர்கள் வருவார்கள் ,அதில் பொம்மி என்று சிறுமியும் ஒருவர்.

- Advertisement -

அத்திந்தோம் பொம்மி என்றால் அனைவருக்கும் தெரியும்.
அந்த அளவுக்கு ஒரு பாடலின் மூலமே பிரபலமானவர்..
நயன்தாரா பாட்டு சொல்லிக் கொடுப்பதை ரஜினி சீண்டுவதுபோலும், அதற்கு  நயன்தாரா கோபப்படுவது போலும் , ரஜினியே அத்திந்தோம் என்ற பாட்டு பாடி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவார்!!

அப்பாடலில் பொம்மி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றவர் குழந்தை நட்சத்திரமான பிரஹர்சிதா! பிரஹர்சிதாவின் நளினமான நடன அசைவுகளும், முக பாவனைகளும் மக்கள் மனதில் எளிதாக இடம் பிடித்தது..

- Advertisement -

அதன் பிறகு வேலன் என்ற தொடரில், முருகன் வேடத்தில் சிறப்பாக நடித்து, தெய்வக் குழந்தையாகவே ரசிகர்களால் போற்றப்பட்டார்..அதன் பிறகு ராஜராஜேஸ்வரி என்ற தொடரில் அம்மன் வேடத்தில் தோன்றி அனைவரையும் பக்தி பரவசப்படுத்தினார்.

வெளியில் செல்லும்போது எல்லாம் குழந்தை பிரகசித்தாவை தெய்வமாகவே கும்பிடும் ரசிகைகளும்  இருந்தனர்.
அப்படி இருந்த நிலையில் திடீரென்று சினிமாவுக்கு பெரிய கும்பிடு போட்டுவிட்டு திரை உலகை விட்டு விலகினார் பிரஹர்சிதா.

அதன் பிறகு படித்து, திருமணம் செய்து கொண்டதோடு, ஒரு குழந்தைக்கும் தாயாகி விட்டார்!!!
இது ரசிகர்களுக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமில்லாமல் அவருடைய புதிய அறிவிப்பு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

18 ஆண்டுகளுக்குப் பிறகு திரை உலகில் மீண்டும் பிரவேசிக்க  முடிவெடுத்துள்ளார்  பொம்மி!!!
முன்னணி தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒரு தொடரில் மீண்டும் அவதாரம் எடுக்கப் போகிறாராம் பிரஹர்சிதா. 18 வருடங்களுக்குப் பிறகு திரையில் தோன்றயிருக்கும்  பிரகர்ஷிதாவை வரவேற்க காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். அதிலும் ரசிகைகளோ பக்தி பரவசத்துடன் காத்திருக்கிறார்கள்!!!

Most Popular