Monday, April 29, 2024
- Advertisement -
Homeசினிமா“வீடு வர வந்து …” - நலம் விசாரிக்க வீட்டுக்கு வந்த ரசிகருக்காக சியன் விக்ரம்...

“வீடு வர வந்து …” – நலம் விசாரிக்க வீட்டுக்கு வந்த ரசிகருக்காக சியன் விக்ரம் போட்ட பதிவு வைரல் !

தமிழ் திரையுலகில் சிறந்த நடிகராகவும், ரசிகர்கள் அனைவராலும் சியான் என அழைக்கப்படும் நடிகர் விக்ரம் தங்காலன் படபிடிப்பில் காயம் ஏற்பட்டதை,தொடர்ந்து அந்த படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது . இந்த நிலையில் ரசிகர் ஒருவர் விக்ரமின் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சமீபத்தில் வெளியாகிய திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படத்தில் ஆதித்யா கரிகாலச் சோழனாக நடித்தவர் நடிகர் விக்ரம். எப்பவும் போலவே படத்தில் மற்றவர்கள் கூட இவரை நடிப்பு இன்னும் அதிகம் பேசப்பட்டது. நடிகர் விக்ரம் பொதுவாக இயக்குனர் என்ன கேட்கிறாரோ அதையே அவ்வாறு செய்து கொடுப்பவர் என்று நாம் அனைவரும் அறிந்ததே.

தங்காலன் திரைப்படத்திற்காக இவர் அதிகபட்சமாக எடையை குறைத்து நடித்துள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் இயக்குனர் சங்கர் இயக்கிய ஐ படத்திலும் அவ்வாறே நடிப்பதற்காக இடையே பல வகையில் எடையை குறைத்தும் மாறுபட்ட வேடங்களிலும் நடித்திருந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தற்பொழுது இயக்குனர் பா ரஞ்சித் எங்கு வரும் தங்கள் திரைப்படத்தில் நடிகராக விக்ரம் அவர்கள் நடித்து வருகிறார்.

- Advertisement -

இந்த திரைப்படத்தின் காட்சிக்காக ஒத்திகை நடைபெற்ற போது நடிகர் விக்ரம் அவர்களுக்கு விலா எலும்பில் காயம் ஏற்பட்டது. அதனால் படப்பிடிப்பில் சிறிது நாட்களுக்கு இவரால் கலந்து கொள்ள முடியாது என்று இவர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இதை தெரிந்து கொண்ட ரசிகர் சிவா என்பவர் அவரது வீட்டிற்கு முன்பு சென்று அவருடைய நலம் விசாரிக்கும் வகையில் ஒரு பேனரை தயார் செய்து கொண்டு போய் அவரின் வீட்டின் கதவிற்கு முன்னால் நின்று எடுத்த ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த பேனரில் ரசிகர் சிவா என்பவர் ” விரைவில் குணமடைந்து வாருங்கள் எங்கள் சீப் சியான், உங்களின் அன்பிற்கு நாங்கள் அடிமை உங்கள் வருகை எதிர்பார்த்து நாங்கள் அனைவரும் காத்திருக்கிறோம்” என்று அந்த பேனரில் எழுதியிருந்தார் இதற்கு பதில் அளிக்கும் வகையில் அவரின் பதிவை பகிர்ந்து நடிகர் விக்ரம் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

அந்த பதிவில் நடிகர் விக்ரம் ” மிக்க நன்றி சிவா,வீடு வரை வந்து உங்கள் அன்பை தெரிவித்ததற்க்கு நீங்கள் எல்லோரும் என்னுடன் இருக்கும்போது எனக்கு வேறு என்ன வேண்டும் நான் திரும்ப வருவேன் ” என்று அந்த பதிவில் நடிகர் விக்ரம் கூறியுள்ளார்.

இவ்வாறு தெரிவித்து இருப்பதன் மூலம் காயத்தின் தன்மை அதிகமாக இல்லாத போல இருப்பதால், விரைவில் படபிடிப்பு கலந்து கொண்டு குறிப்பிட்ட தேதியில் தங்காலன் திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்க தொடங்கி விட்டார்கள்.

Most Popular