Friday, May 17, 2024
- Advertisement -
HomeEntertainmentசிவகார்த்திகேயம் பாவம்.. எங்களுக்கு நல்லது செய்யனும்னு நினைச்சாரு.. டி.இமானின் முதல் மனைவி பேட்டி

சிவகார்த்திகேயம் பாவம்.. எங்களுக்கு நல்லது செய்யனும்னு நினைச்சாரு.. டி.இமானின் முதல் மனைவி பேட்டி

வருத்தப்படாத வாலிபர் சங்கர், மனம் கொத்தி பறவை, சீமராஜா, ரஜினி முருகன் என்று சிவகார்த்திகேயனின் ஆரம்பக் கட்ட படங்கள் ஹிட்டாக முக்கிய காரணமாக அமைந்தவர் டி.இமான். இவரது பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் இப்போதும் கேட்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்ததாகவும், இந்த ஜென்மத்தில் அவருடன் மீண்டும் இணைய மாட்டேன் என்று இமான் பேட்டி கொடுத்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் என்ன துரோகம் என்று சொல்லாமல், துரோகத்தை சொன்னால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும் என்று கூறியது பல்வேறு விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே டி.இமானின் விவாகரத்துக்கு காரணமே சிவகார்த்திகேயன் தான் என்ற பேச்சும் அதிகமாகியுள்ளது. இந்த நிலையில் டி.இமானின் முதல் மனைவி மோனிகா விளக்கம் அளித்துள்ளார்.

அதில் மோனிகா பேசும் போது, சிவகார்த்திகேயன் எங்களின் குடும்ப நண்பர். ஒரு நண்பராக டி.இமானும், நானும் பிரியக் கூடாது என்று எங்களுக்குள் சமாதானம் செய்தார். டி.இமானின் விவாகரத்துக்கு சிவகார்த்திகேயன் ஆதரவாக இல்லை. அதன் காரணமாக தான் சிவகார்த்திகேயனை இமானுக்கு பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். சிவகார்த்திகேயன் மீது எந்த தப்பும் இல்லை. டி.இஅமான் தான் விவாகரத்துக்கு முன்பாக பெண்ணை எல்லாம் பார்த்து வைத்தார்.

- Advertisement -

குழந்தைகளை பற்றி பேசும் டி.இமான் எத்தனை முறை குழந்தைகளை பார்த்து வந்துள்ளார் என்று கேளுங்கள். திருமணம் செய்து கொண்ட பின், பெயருக்காக இரு மகள்களையும் சந்திக்க வந்தார். அப்போது கூட என் மகள்களை அவரை வர வேண்டாம் என்று கூறிவிட்டனர். இன்று நாம் சொந்தமாக நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறேன். 3 ஆண்டுகள் தொடர்ந்து உழைத்து இன்று 30 பேருக்கும் அதிகமாக ஊதியம் கொடுத்து வருகிறேன். இந்த நேரத்தில் வேண்டுமென்றே டி.இமான் இப்படி பேசி வருகிறார்.

- Advertisement -

இமானின் பேச்சால் நாங்கள் பாதிக்கப்படுவதை விட சிவகார்த்திகேயனின் குடும்பத்தினர் தான் இன்னும் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். எங்களின் விவாகரத்துக்கு பின் சிவகார்த்திகேயன் எங்களுடன் பேச கூடவில்லை. பட வாய்ப்புகள் இல்லையென்பதால், இப்படியெல்லாம் பேசி கொண்டிருக்கிறார். எங்களுக்கு இதையெல்லாம் காது கொடுத்து கேட்பதற்கு கூட நேரமில்லை என்று தெரிவித்துள்ளார்.

Most Popular