Saturday, May 4, 2024
- Advertisement -
HomeEntertainmentசூர்யா, சிம்பு, தனுசை வைத்து படம் எடுக்க செல்வராகவன் திட்டமிட்டு இருந்தார்… பரத்தைத் தொடர்ந்து 7...

சூர்யா, சிம்பு, தனுசை வைத்து படம் எடுக்க செல்வராகவன் திட்டமிட்டு இருந்தார்… பரத்தைத் தொடர்ந்து 7 ஜி ரவி கிருஷ்ணாவும் ஓபன் செய்த ஃபிளாஷ்பேக்… இன்னும் எத்தனை பேர் தான்யா இப்படி வந்திருக்கீங்க…

கோலிவுட்டில் வெற்றி திரைப்பட இயக்குனர்கள் பட்டியலில் ஏராளம் பேர் இருந்தாலும், அவர்களில் சிலருக்கு தான் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதில் முதன்மையாக இருப்பவர் யார் என்றால் நிச்சயம் செல்வராகவனை கூறலாம். இளைஞர்களின் இதயத் துடிப்பை சரியாக அறிந்து படம் இயக்குவதில் வல்லவரான செல்வராகவனை, ரசிகர்கள் இன்றும் கொண்டாடி வருகின்றனர்.

- Advertisement -

காதல் கொண்டேன் திரைப்படம் மூலம் தனது இயக்கத்தின் முழு திறமையையும் வெளிப்படுத்திய செல்வராகவன், தமிழ் சினிமா இதுவரை சொல்லாத கதை களத்தை சுவாரசியமாக கூறி வெற்றி கண்டார். ஒரு அப்பாவி இளைஞன், பெண்ணின் மீது கொள்ளும் காதல் எதுவரைக்கும் செல்கிறது என்பதை அழுத்தமாக பதிவு செய்த செல்வராகவன், தனது முதல் திரைப்படத்திலேயே பாராட்டுகளை பெற்றார்.

இதன் பிறகு அவர் இயக்கிய திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி. காதல் ரசம் சொட்ட சொட்ட எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல் என்று கூறலாம். எதிர்காலத்தைப் பற்றி சிறிதும் யோசிக்காமல் ஊர் சுற்றும் இளைஞர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்திய ரவி கிருஷ்ணா, பெற்றோரின் பேச்சைக் கேட்டு கண்ணியமான இளம்பெண்ணாக சோனியா அகர்வால் இருவரும் போட்டி போட்டு நடிக்க 7ஜி ரெயின்போ காலனி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

- Advertisement -

இதன் பிறகு தனது தம்பி தனுசை வைத்து புதுப்பேட்டை, மயக்கம் என்ன, நானே வருவேன் திரைப்படங்களை அவர் இயக்கினார். ஆயிரத்தில் ஒருவன், நெஞ்சம் மறப்பதில்லை, இரண்டாம் உலகம், என் ஜி கே என செல்வராகவனின் பட்டியல் நீண்டு கொண்டே போக தற்போது அவர் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே 7 ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்க அவர் முடிவு செய்துள்ளார்.

- Advertisement -

இந்த நிலையில் படத்தில் நடித்துள்ள ரவி கிருஷ்ணா, சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் செல்வராகவன் திட்டமிட்டு இருந்த படம் குறித்து பேசியுள்ளார். அதில், சூர்யா சிம்பு தனுஷ் ஜெயம் ரவி ஜெனிலியா ஆகியோரை நடிக்க வைக்க செல்வராகவன் திட்டமிட்டு இருந்ததாகவும், ஆனால் கடைசியில் அந்த படம் எடுக்கப்படாமல் போனது என்றும் தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு நடிகர் பரத் அளித்திருந்த பேட்டியில், இயக்குனர் செல்வராகவன் காசிமேடும் எடுக்க திட்டமிட்டிருந்ததாக கூறியுள்ளார். அதில் அஜித் தனுஷ் மற்றும் தான் நடிக்க இருந்ததாகவும், கடைசி நேரத்தில் அது நடக்காமல் போனது என்றும் தெரிவித்தார். இந்த வெயில் தற்போது இதே பாணியில் ரவி கிருஷ்ணாவும் கூறி இருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது. அது மட்டுமல்லாமல், செல்வராகவன் இன்னும் எத்தனை வருடங்கள் தான் இப்படி திட்டமிட்டு இருந்தார் என்று பலரும் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Most Popular