Saturday, April 20, 2024
- Advertisement -
HomeEntertainmentமீண்டும் இணையும் கர்ணன் கூட்டணி… அடுத்தடுத்து ரவுண்ட் கட்டி நிற்கும் படங்கள்… தனுஷ் ரசிகர்களுக்கு செம...

மீண்டும் இணையும் கர்ணன் கூட்டணி… அடுத்தடுத்து ரவுண்ட் கட்டி நிற்கும் படங்கள்… தனுஷ் ரசிகர்களுக்கு செம ட்ரீட்…!

நடிகர் தனுஷ் கோலிவுட்டில் மட்டுமே தன்னுடைய எல்லைகளை குறுக்கிக் கொள்ளாமல், பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது புதிய முயற்சியாக தெலுங்கிலும் சார் படத்தின் மூலம் அவர் அறிமுகம் ஆகியுள்ளார். இவரது அடுத்தடுத்த படங்களில் குறிப்பிட்ட இடைவெளிகளில் தொடர்ந்து ரிலீசான வண்ணம் உள்ளது.

- Advertisement -

தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலம் அதிகமான ரசிகர்களை கோலிவுட்டில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் வைத்துள்ளார் தனுஷ். அதனால்தான் இவரால் தொடர்ந்து பாலிவுட் படங்களிலும் முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து நடிக்க முடிகிறது. இவரது நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான மாறன், திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் படங்கள் ரசிகர்களை கவர்ந்தது. குறிப்பாக நித்யா மேனனுடன் ஜோடி சேர்ந்து தனுஷ் நடித்திருந்த திருச்சிற்றம்பலம் சிறப்பான வெற்றியை கொடுத்தது.

தொடர்ந்து வாத்தி திரைப்படத்தையடுத்து, கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்தப் படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங்கை வரும் மார்ச் மாதத்தில் நிறைவு செய்யவுள்ள தனுஷ், அடுத்ததாக தன்னுடைய டி50 படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார். இந்தப் படத்தை தனுஷ் இயக்கி நடிக்கவுள்ள நிலையில், ஒரு மாத காலம் இந்தப் படத்தின் முன் தயாரிப்பிற்காக நேரம் ஒதுக்கும் தனுஷ், மே மாதத்தில் படத்தின் படப்பிடிப்பை துவங்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

படத்தில் விஷ்ணு விஷால், எஸ்ஜே சூர்யா முக்கியமான கேரக்டர்களில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் மீண்டும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வந்த மாமன்னன் படப்பிடிப்பு நிறைவடைந்தது. படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

- Advertisement -

விரைவில் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து வாழை படத்தை இயக்கியுள்ள மாரி செல்வராஜ், அடுத்ததாக துருவ் விக்ரமை வைத்து படம் இயக்க உள்ளார். கபடி விளையாட்டை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படங்களைத் தொடர்ந்து தனுசுடன் மாரி செல்வராஜ் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான கர்ணன் திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தை தனுஷே தயாரிக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. தனுஷ் தனது ஐம்பதாவது திரைப்படத்தில் தொடர்ந்து மாரி செல்வராஜுடன் இணைய இருப்பது அவரது ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Most Popular