Entertainment

மகனைத் தொடர்ந்து தந்தையுடன் இணையும் இயக்குனர்.. கதை கேட்டு உற்சாகமடைந்த விக்ரம்.. இது மாரி செல்வராஜின் புதிய திட்டம்..!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வந்த மாமன்னன் படப்பிடிப்பு நிறைவடைந்தது. படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை மாரி செல்வராஜ் கடந்த ஆண்டு இறுதியில் பகிர்ந்தார்.
அதன்படி வாழை படம் குறித்த அறிவிப்பை மாரி செல்வராஜ் பகிர்ந்த நிலையில், சென்ற நவம்பர் 21ஆம் தேதி ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வாழை படப்பிடிப்பை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

1994 ஆண்டில் நடந்த உண்மை சம்பவத்தைக் கொண்டு இப்படம் உருவாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். மாரி செல்வராஜ் இயக்கும் நான்காவது படமான இதில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பிரியங்கா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இருப்பினும் படம் சிறுவர்களை மையப்படுத்தி உருவாக உள்ளது.

Advertisement

இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கும் இப்படம், தியேட்டரில் ரிலீசாகாமல் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. வாழை திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் முடிந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு அடுத்ததாக துருவ் விக்ரமை வைத்து படம் இயக்க உள்ளார். கபடி விளையாட்டை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படங்களைத் தொடர்ந்து தனுசுடன் மாரி செல்வராஜ் இணைய இருக்கிறார்.

இந்த நிலையில் நடிகர் விக்ரமிற்கு மாரி செல்வராஜ் கதை ஒன்றை கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கதை விக்ரமிற்கு மிகவும் பிடித்து விட்டதாகவும், துருவ் விக்ரம், தனுஷ் படங்களை தொடர்ந்து அவர் விக்ரமுடன் இணைவார் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஏற்கனவே துருவ் விக்ரமுடன் இணைந்து மாரி செல்வராஜ் படம் எடுக்கும் நிலையில், தற்போது தந்தை விக்ரமுடம் அவர் இணைய இருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top