Saturday, April 27, 2024
- Advertisement -
HomeEntertainmentமீண்டும் மலையாள நாயகி.. துருவ் விக்ரம் படத்திலும் தொடரும் மாரி செல்வராஜின் செண்டிமெண்ட்!

மீண்டும் மலையாள நாயகி.. துருவ் விக்ரம் படத்திலும் தொடரும் மாரி செல்வராஜின் செண்டிமெண்ட்!

மாமன்னன் படத்தின் பெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் வாழை படத்தினை இயக்கியுள்ளார். வாழை படத்தின் இயக்குநர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் மாரி செல்வராஜ் மாறி இருக்கிறார். இந்த திரைப்படம் இன்னும் சில மாதங்களில் ரிலீஸாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் திவ்யா துரைசாமி நடித்துள்ளார்.

- Advertisement -

இந்த படத்திற்கு பின் இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகும் படத்தினை இயக்கவுள்ளார். மாரி செல்வராஜின் 3வது படமாக இது அமைய வேண்டிய சூழலில், 5வது படமாக உருவாகவுள்ளது. இந்திய முன்னாள் கபடி வீரர் கணேசனின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாக உள்ளது.

இதற்காக நடிகர் துருவ் விக்ரம் நீண்ட மாதங்களாக கபடி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக நடிக்க பிரேமம், கொடி, சைரன் உள்ளிட்ட படங்களில் நடித்த அனுபமா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை மாடர்ன் கதாபாத்திரங்களில் நடித்து வந்த அனுபமா முதல்முறையாக கிராமிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

- Advertisement -

மாரி செல்வராஜ் இயக்கும் படங்களில் அதிகளவில் மலையாள நடிகர்களை நடிக்க வைப்பது அதிகமாகி வருகிறது. முதல் படத்தில் உள்ளூர் மக்களையே நடிக்க வைத்த மாரி செல்வராஜ், 2வது படத்தில் நாயகியாக ரஜிஷா விஜயனை ஒப்பந்தம் செய்தார். அதேபோல் மலையாள நடிகரான லாலை மீண்டும் அழைத்து வந்தார்.

- Advertisement -

அதேபோல் மாமன்னன் படத்தில் கீர்த்தி சுரேஷ் மட்டுமல்லாமல், ஃபகத் ஃபாசிலையும் அழைத்து வந்தார். அதேபோல் முதலமைச்சராக லாலை நடிக்க வைத்தார். தற்போது மீண்டும் மலையாள நடிகையை நாயகனுக்கு ஒப்பந்தம் செய்துள்ளார். இதனால் இயக்குநர் மாரி செல்வராஜிற்கு மலையாள நடிகர்கள் மீதான பாசம் அதிகம் என்று ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

Most Popular