Friday, May 3, 2024
- Advertisement -
HomeEntertainment"எத்தனை பேர் குறை சொன்னாலும் காலத்தால் மறைக்க முடியாத காவியம் தேவர்மகன்" - திரெளபதி இயக்குநர்...

“எத்தனை பேர் குறை சொன்னாலும் காலத்தால் மறைக்க முடியாத காவியம் தேவர்மகன்” – திரெளபதி இயக்குநர் மோகன் ஜி கருத்து

மாமன்னன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் தேவர் மகன் பட விவகாரம் தொடர்பாக இயக்குனர் மாரி செல்வராஜ் பேசியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இது குறித்து திரெளபதி இயக்குனர் மோகன் கருத்து தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மாரி செல்வராஜின் மாமன்னன்

பரியேறும் பெருமாள் கர்ணன் படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் அடுத்ததாக இயக்கி உள்ள திரைப்படம் மாமன்னன். உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த திரைப்படம் வரும் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சமீபத்தில் வெளியான மாமன்னன் திரைப்படத்தின் ட்ரெய்லர் சமூக வரவேற்பை பெற்றது.

தேவர்மகன் பட விவகாரம்

சமீபத்தில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மாமன்னன் திரைப்பட இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர்கள் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், இயக்குனர் வெற்றிமாறன் உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் பங்கேற்றனர். விழாவில் பேசிய விழாவில் பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ், தேவர் மகன் திரைப்படம் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன் வைத்திருந்தார்.

- Advertisement -

அந்த திரைப்படத்தில் நடித்திருந்த இசக்கி கதாபாத்திரம் மாமன்னன் ஆகினால் எப்படி இருக்கும் என்பதுதான் இந்த படம் என்று கூறியிருந்தார். தேவர்மகன் படத்தை பார்க்கும்போது தனக்கு ஏற்பட்ட வலியை கடக்க முடியாமல் தவித்ததாகவும், ஒரு சினிமா சமூகத்தை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதை உணர்த்தி படம் தான் தேவர்மகன் என்றும் பேசி இருந்தார். மாரி செல்வராஜின் பேச்சு சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், அவருக்கு கமல் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

- Advertisement -

விளக்கம் அளித்த இயக்குனர்

இந்நிலையில் தேவர் மகன் படம் விவகாரம் குறித்து விளக்கம் அளித்த இயக்குனர் மாரி செல்வராஜ், தன் முன்னால் கமல்ஹாசன் அமர்ந்திருந்தபோது, தனக்குள் இருக்கும் விஷயத்தை அன்று பேசவில்லை என்றால் என்று பேசுவது என்பதை தான் உணர்ந்ததாகவும் கூறினார். கலைக்கு நெருக்கமானவரிடம் தான் இதனை தான் கூறியதாகவும், அவரும் எனக்கு ஆதரவாக பேசி விட்டு சென்றார் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

தேவர்மகன் குறித்து பேசிய மோகன் ஜி

இந்நிலையில் தேவர்மகன் திரைப்படம் குறித்து திரெளபதி இயக்குநர் மோகன் ஜி கருத்து தெரிவித்துள்ளார். தேவர்மகன் தமிழ்சினிமாவின் சிறந்த திரைக்கதைகளில் ஒன்று எனக் கூறியிருக்கும் அவர், 30 ஆண்டுகள் ஆகியும் இப்படி ஒரு ஆழமான தென் மாவட்ட கதையை இதுவரை யாரும் சொல்லாததே இந்த திரைப்படத்தின் தனித்தன்மை என்று கூறியிருக்கிறார். எத்தனை பேர் குறை சொன்னாலும் காலத்தால் மறைக்க முடியாத காவியம் தேவர்மகன் என்றும் மோகன் ஜி கூறியுள்ளார். இந்நிலையில் மோகன்ஜி, மாரி செல்வராஜைதான் மறைமுகமாக குறிப்பிட்டு பேசியிருப்பதாக பலரும் சமூகவலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Most Popular