Sunday, April 28, 2024
- Advertisement -
HomeEntertainmentபான் இந்தியா ஹீரோவுக்கு கதை சொல்லியிருக்கேன்.. விரைவில் அறிவிப்பு வரும்.. சூசகமாக சொன்ன சமுத்திரக்கனி

பான் இந்தியா ஹீரோவுக்கு கதை சொல்லியிருக்கேன்.. விரைவில் அறிவிப்பு வரும்.. சூசகமாக சொன்ன சமுத்திரக்கனி

உன்னை சரணடைந்தேன், நெறஞ்ச மனசு உள்ளிட்ட படங்கள் மூலமாக இயக்குநராக அறிமுகமான சமுத்திரக்கனி, நாடோடிகள் படத்தின் மூலமாக அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். அதேபோல் போராளி, அப்பா உள்ளிட்ட படங்களை இயக்கி ஹிட் கொடுத்தார். இதனிடையே சுப்ரமணியபுரம் படத்தின் மூலமாக நடிகராகவும் அறிமுகமானார்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து சாட்டை படத்தில் நாயகனாக சமுத்திரக்கனி நடிக்க, அடுத்தடுத்து பெரிய படங்களில் தோன்ற தொடங்கினார். விஐபி, வடசென்னை, விசாரணை என்று தரமான படங்களில் நடிக்க, சமுத்திரக்கனியின் புகழ் தெலுங்கு சினிமாவிலும் பரவியது. இதனைத் தொடர்ந்து அலவைக்குந்தபுரமலோ, சர்காரு வரி பட்டா, ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட பெரிய படங்களில் நடித்து வந்தார்.

தற்போது இந்தியன் 2, கேம்சேஞ்சர், பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ராஜாசாப் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே இயக்குநராக பவன் கல்யாணை வைத்து ப்ரோ படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார். நடிப்பு, இயக்கம் என்று வலம் வரும் சமுத்திரக்கனி, அடுத்ததாக பான் இந்தியா ஹீரோ ஒருவருக்கு கதை ஒன்றை கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்தியாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவரை சந்தித்து கதை கூறியுள்ளேன். விரைவில் அதற்கான அறிவிப்பு வரும் என்று சூசகமாக சமுத்திரக்கனி கூறியுள்ளார். இந்த நிலையில் அந்த தலைசிறந்த ஹீரோ யார் என்பது தெரிய வந்துள்ளது. அது தமிழ் சினிமாவில் மக்கள் செல்வனான விஜய் சேதுபதி தான். மெர்ரி கிறிஸ்துமஸ் மூலமாக பாலிவுட்டிலும் விஜய் சேதுபதி கவனம் ஈர்த்துள்ளார்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து தமிழில் விடுதலை 2, மகாராஜா, ட்ரெயின் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கு பின் விஜய் சேதுபதி சமுத்திரக்கனியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தினை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Most Popular