Monday, May 6, 2024
- Advertisement -
HomeEntertainmentஆர்யா, கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் "மிஸ்டர் எக்ஸ்".. யாரு அந்த மிஸ்டர் எக்ஸா இருக்கும்...

ஆர்யா, கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் “மிஸ்டர் எக்ஸ்”.. யாரு அந்த மிஸ்டர் எக்ஸா இருக்கும் ? கேள்விகளை வீசும் ரசிகர்கள்.. அடுத்த ஆண்டு தான் பதில் தெரியுமாம்!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் எப்.ஐ.ஆர். இப்படத்தில் மஞ்சிமா மோகன் ரைசா வில்சன், ரெபா மோனிகா உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்தனர். கௌதம் மேனனிடம் உதவி இயக்குநராக இருந்த மனு ஆனந்த் இந்தப் படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் கௌதம் மேனனும் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். இப்படத்திற்கு அஸ்வத் இசையமைக்க, அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்தார். விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றியது.

- Advertisement -

கடந்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் எப்.ஐ.ஆர் பட இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிரின்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பின் கீழ் மனு ஆனந்த் புதிய படத்தை இயக்க இருக்கிறார்.

ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் இருவரும் இணைந்து நடிக்கும் படத்திற்கு மிஸ்டர் எக்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் அறிவிப்பு சிறிய வீடியோவுடன் வெளியிடப்பட்டு, அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ஆர்யா தற்போது முத்தையா இயக்கத்தில் ‘முத்துராமலிங்கம் என்ற காதர் பாட்ஷா’ படத்தில் நடித்த முடித்துள்ளார். படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. முத்தையாவின் வழக்கமான படங்கள் போலவே கிராமத்துக் கதைக்களத்தில் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது.

- Advertisement -

இதற்கிடையில் கௌதம் கார்த்திக் சிம்புவுடன் நடித்த ‘ பத்து தல’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த திரைப்படத்தின் மூலம் நல்ல விமர்சனங்களை பெற்ற கௌதம் கார்த்திக் தற்போது ஆகஸ்ட் 16 1947 திரைப்படத்தில் நடித்துள்ளார். ஏ ஆர் முருகதாஸ் தயாரிப்பில் அவரிடம் எட்டு வருடங்கள் உதவி இயக்குனராக இருந்த இருந்த பொன் குமார் படத்தை இயக்கியுள்ளார். சுதந்திர காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் என இரு அதிரடி ஹீரோக்கள் இணைந்து இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Most Popular