Tuesday, May 7, 2024
- Advertisement -
Homeசினிமாவிஜய்யின் திடீர் முடிவுக்கு இது தான் காரணமா?

விஜய்யின் திடீர் முடிவுக்கு இது தான் காரணமா?

நடிகர் விஜய் இன்ஸ்டாகிராமில் கணக்கை துவங்கிய நிலையில், திடீரென ஏன் இந்த முடிவை எடுத்தார் என்ற விவாதமே கிளம்பியுள்ளது.

- Advertisement -

நடிகர் விஜய் திடீரென இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணக்கை தொடங்கினார். ஹலோ நண்பாஸ், நண்பிஸ் என்ற கேப்ஷனுடனும், லியோ லுக்கில் இருக்கும் போட்டோவுடன் விஜய்யின் இன்ஸ்டா என்ட்ரி அமைந்தது.

இதுவரை டிவிட்டரில் மட்டுமே வலம் வந்த விஜய் திடீரென இன்ஸ்டா பக்கம் வர என்ன காரணம்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தநிலையில் இது சம்பந்தமான முக்கிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

- Advertisement -

நடிகர் விஜய் அரசியலுக்கு வரும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையேதான் அவருடைய மேனேஜரான ஜெகதீஸ் புதிய ஐடியா ஒன்றை கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

- Advertisement -

விஜய்யின் மேனேஜர் ஜெகதீஸ், அவருடைய சமூக வலைதளங்களை ஹேண்டில் செய்வதில் கெட்டிக்காரர் என்றே சொல்கின்றனர். இவர்தான் விஜய்யின் டிவிட்டர் கணக்கிற்கு அட்மினாக இருக்கிறார்.

அரசியலில் தடம் பதிக்க வேண்டும் என்ற ஆசை விஜய்க்கு இருப்பதால், அவருடைய சமூகவலைதள பக்கங்களை இன்னும் மெருகேற்ற வேண்டும் என ப்ளான் செய்திருக்கிறார் ஜெகதீஸ். அதாவது, எதிர்காலத்தில் அரசியலுக்கு போக வேண்டும் என்றால் சோஷியல் மீடியா முக்கியமானதாக இருக்கும். அதனால், இளைஞர்களை குறிவைக்க இன்ஸ்டாவில் அக்கவுண்ட் வேண்டும் என விஜய்க்கு ஐடியா கொடுத்துள்ளாராம்.

அதனால்தான் அரசியலில் விஜய்யின் முதல் இலக்கு இளைஞர்கள்தான் என இன்ஸ்டாகிராமில் அக்கவுண்ட் திறந்துள்ளார் என கூறப்படுகிறது.
அதனை நிரூபிக்கும் வகையில் இதுவரை மொத்தம் 6.4 மில்லியன் பேர் விஜய்யை இன்ஸ்டாவில் ஃபாலோ செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

Most Popular