Sunday, April 28, 2024
- Advertisement -
HomeEntertainmentஎன்னது…தெறி படத்தில் யோகி பாபு நடித்திருந்தாரா?… அட்லி மேல இருக்கிற காண்டுல அவரே சொன்ன பதிலை...

என்னது…தெறி படத்தில் யோகி பாபு நடித்திருந்தாரா?… அட்லி மேல இருக்கிற காண்டுல அவரே சொன்ன பதிலை கேளுங்க

சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் பயணப்பட்டு அதில் வெற்றி கொடியையும் நாட்டியவர்கள் இங்கு வெகு சிலரே உள்ளனர். சிவகார்த்திகேயன், கவின், சமுத்திரக்கனி, சந்தானம் உள்ளிட்டோர் அடங்கிய பட்டியலில் யோகி பாபுவும் இருக்கிறார். தமிழ் சினிமாவில், நாகேஷ், கவுண்டமணி, செந்தில், மனோரமா, கோவை சரளா, வடிவேலு, விவேக், சந்தானம் என ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் உள்ளனர்.

- Advertisement -

இதில் ஒவ்வொரு காலத்திற்கேற்ப நகைச்சுவை நடிகர்கள் உருமாற, கடைசியாக சந்தானமும் ஹீரோவாகும் ஆசையில் துணை நடிகருக்கான கதாபாத்திரத்தை கைவிட்டார். இப்படி இருக்க கோலிவுட்டில் சிரிப்புக்கு பஞ்சம் ஏற்பட, அதைப் போக்க அவதரித்தார் யோகி பாபு. ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்த அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை யாமிருக்க பயமேன் மற்றும் காக்கா முட்டை ஆகிய திரைப்படங்கள் கொடுத்தன.

காக்கா முட்டையில் வெள்ளந்தி கதாபாத்திரத்தில் திருட்டு இளைஞராக நடித்திருந்த யோகி பாபு, ஒவ்வொரு காட்சியிலும் நம்மை சிரிக்க வைத்தார். தொடர்ந்து, யோகி பாபுவுக்கு என கச்சிதமான கதாபாத்திரங்கள் கிடைக்க, அவரை தமிழ் சினிமா அள்ளி அணைத்துக் கொண்டது. நகைச்சுவை நாயகனாக மட்டுமல்லாமல், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் வெளுத்து வாங்கினார் யோகி பாபு.

- Advertisement -

இதில் உதாரணத்திற்கு பரியேறும் பெருமாள் திரைப்படத்தைக் கூறலாம். படத்தில் யோகி பாபு வரும் காட்சி முழுக்க சிரிப்பால் இருந்தாலும், சில முக்கியமான காட்சிகளில் பிரமாதமான நடிப்பை அவர் வெளிப்படுத்தி இருந்தார். ஒரு பக்கம் குணச்சித்திர கதாபாத்திரத்தில் பட்டைய கிளப்ப, மறுபக்கம் ரஜினிகாந்த், விஜய், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் போட்டி போட்டு நடித்து நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார்.

- Advertisement -

தொடர்ந்து கதாநாயகனாகும் வாய்ப்பும் யோகி பாபுவுக்கு கிடைத்தது. இதில் சில படங்கள் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும், மண்டேலா திரைப்படம் ஒன்றே அவரின் மொத்த நடிப்புக்கும் தீனி போடும் விதமாக அமைந்தது. படம் முழுக்க இளிச்சவாயனாகவே வந்து நம்மை இமை தட்டாமல் ரசிக்க வைத்தார் யோகி பாபு. சமீபத்தில் மாவீரன் படத்தில் காமெடியில் வெளுத்து வாங்கிய இவர், அட்லி ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் ஜவான் படத்திலும் நடித்திருக்கிறார்.

இதன் ஃப்ரீ ரிலீஸ் விழா சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது. இதில் பேசிய யோகி பாபு, எனக்கு தெறி படத்திலேயே விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. விஜய்க்கும் எனக்கும் ஏகப்பட்ட கவுன்டர் காமெடிகள் இருந்தன. ஆனால் படம் அதிக நேரம் இருந்ததால், என்னுடைய காட்சி அனைத்தையும் நீக்கிவிட்டார் எடிட்டர் ரூபன். அப்போது அட்லி என்னிடம், இனி வரும் என்னுடைய அனைத்து படங்களிலும் நீங்கள் இருப்பீர்கள் என்று சத்தியம் செய்தார். அதேபோல், மெர்சல், பிகில் படங்களில் வாய்ப்பு கொடுத்த அட்லி, இப்போது ஷாருக்கானுடன் ஜவான் படத்திலும் நடிக்க வைத்து விட்டார் என்று கூறினார். யோகி பாபுவின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Most Popular