Tuesday, May 14, 2024
- Advertisement -
HomeEntertainmentவிஜய் சாருக்கு 2 கதைகளை கூறினேன்... அவருக்கு பிடிக்கவில்லை... அதற்கு காரணம் வேற... ஓபனாக கூறிய...

விஜய் சாருக்கு 2 கதைகளை கூறினேன்… அவருக்கு பிடிக்கவில்லை… அதற்கு காரணம் வேற… ஓபனாக கூறிய கார்த்திக் சுப்புராஜ்

பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட, மெர்குரி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். வித்தியாசமான கதைக்களங்களை எடுத்து தனது ஸ்டைலில் திரைக்கதை அமைத்து ஹிட் கொடுத்து வருவதால், இளம் தலைமுறை இயக்குநர்களில் முக்கியமானவராக அறியப்படுகிறார். அதுமட்டுமல்லாமல் விக்ரம் நடிப்பில் வெளியான மஹான் திரைப்படம் பலரையும் திரும்பி பார்க்க வைத்தது.

- Advertisement -

இந்த படத்தை பார்த்த நடிகர் விஜய், தயாரிப்பாளர் லலித் குமாரை அழைத்து, இவ்வளவு சிறப்பான படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்துவிட்டாயே.. திரையரங்கில் வெளி வந்திருக்க வேண்டிய படம் இது என்று பாராட்டினார். விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடித்த இந்தப் படம் ஓடிடியில் வெளியானாலும் ரசிகரக்ள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜை அழைத்து நடிகர் விஜய் கதை கேட்டதாக கூறப்பட்டது. ஆனால் அதைப் பற்றிய எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் தற்போது ஜிகர்தண்டா 2 படத்தை இயக்கியுள்ளார். எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

- Advertisement -

சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் வரும் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து ஜிகர்தண்டா படக்குழுவினர் படத்தின் விளம்பரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

- Advertisement -

இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் பேசும் போது, நடிகர் விஜய்-க்கு இரு கதைகளை கூறியிருக்கிறேன். எனக்கு கதை எழுதும் அளவிற்கு சொல்ல தெரியாது. ஆனால் விஜய் சார் கதையை சொல்ல சொல்லுவார். அவரிடம் மோசமாக கதை கூறினேன். நான் கூறிய 2 கதைகளுமே விஜய் சாருக்கு பிடிக்கவில்லை. விரைவில் நல்ல கதையுடம் அவரது படத்தை இயக்குவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.

Most Popular