Monday, April 29, 2024
- Advertisement -
HomeEntertainmentஇப்பவும் சொல்றேன்… அது மட்டும் நடந்தா, விஜய்யே வந்து என் மீசையை எடுக்கட்டும்… மீண்டும் சவால்...

இப்பவும் சொல்றேன்… அது மட்டும் நடந்தா, விஜய்யே வந்து என் மீசையை எடுக்கட்டும்… மீண்டும் சவால் விடும் நடிகர்… இவருக்கு வேற வேலையே இல்ல போல…

தர்பார், அண்ணாத்த என படுதோல்விகளைக் கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு, மிகப்பெரிய கம்-பேக்காக அமைந்த திரைப்படம் ஜெயிலர். நெல்சன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம், 800 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் ஈட்டியது. இந்த படத்தின் வெற்றியால் குஷியான ரஜினிகாந்த், தற்போது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். முன்னதாக ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவின்போது பேசிய அவர், கழுகு – காகம் கதையை கூறி பரபரப்பை கிளப்பினார். அவர் விஜய்யை மனதில் வைத்துதான் இப்படி பேசியிருப்பதாக பலரும் கூறினர். அதோடு ஜெயிலரில் இடம்பெற்ற ஹுக்கும் பாடலும் விஜய்யை தாக்கியிருப்பதாக பேச்சு எழுந்தது.

- Advertisement -

இப்படியான சூழலில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த துணை நடிகர் மீசை ராஜேந்திரன், தேவையில்லாமல் நடிகர் விஜய்யை வம்பிழுக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் மட்டும்தான் விஜய் நடித்து வந்தார். அந்த சமயத்தில் செந்தூர பாண்டியில் தனது முக்கியத்துவம் இல்லாத கேரக்டரில் விஜயகாந்த் நடித்தார். எஸ்.ஏ.சந்திரசேகர் கேட்டுக்கொண்டதாலேயே அந்த படத்தில் விஜயகாந்த் நடிக்க சம்மதித்தார். விஜயகாந்த் நடித்ததால் செந்தூர பாண்டி திரைப்படம் வெற்றி பெற்றது. ஆனால் இந்த நன்றியை மறந்தவர் விஜய். தற்போது விஜயகாந்த் உடல்நலம் சரியில்லாமல் இருக்க அவரை எட்டிக்கூட அவர் பார்க்கவில்லை என்று பேசினார்.

மேலும், சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பேசிய மீசை ராஜேந்திரன், ரஜினியின் சூப்பர் ஸ்டார் படத்திற்கு விஜய் ஆசைப்படலாமா. விஜய்யின் பீஸ்ட், சர்கார் படங்கள் எல்லாம் குறைவான வசூலையே பெற்றன. அவர் இதுவரை பெரிய சாதனை எதையும் படைக்கவில்லை. ரஜினியை போன்று 800 கோடி ரூபாய் வசூல் சாதனையை செய்து விட்டு, விஜய் சூப்பர் ஸ்டார் பட்டத்தை பற்றி யோசிக்கலாம். எப்போது இங்கு ஒருவர்தான் சூப்பர் ஸ்டார். அது ரஜினிகாந்த் மட்டும்தான். ஒருவேளை, லியோ திரைப்படம் ஜெயிலரை விட வசூல் குவித்தால் நான் என் மீசையை எடுத்து கொள்கிறேன் என்று சவால் விட்டார். நடிகரின் இந்த பேச்சு இணையத்தில் வைரலானது.

- Advertisement -

இந்த நிலையில், தற்போது விஜய்யின் லியோ திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. முதல் நாளில் மட்டும் 148 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படி இருக்க தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருக்கும் மீசை ராஜேந்திரன், மீண்டும் சர்ச்சையாக பேசி வம்பில் சிக்கியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, நான் லியோ படத்தை பார்க்கும் சிலர் அந்த படம், ஆயிரம் கோடி வசூலிக்கும், 2 ஆயிரம் கோடி வசூலிக்கும்-னு அலப்பறை கொடுத்தாங்க. ஒன்னுமில்லை. லியோ படம் மட்டும் 800 கோடி ரூபாய் வசூல்-னு அறிவிப்பு வெளியாகட்டும். அப்படி நடந்துச்சுனா, விஜய் சாரே வந்து மீசைய எடுக்கட்டும் என்று பேசியிருக்கிறார். மீசை ராஜேந்திரனின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Most Popular