Sunday, April 28, 2024
- Advertisement -
HomeEntertainmentஏஆர் ரகுமான் இசையில் பாடியதால் இளையராஜா வாய்ப்பளிக்க மறுத்தார் - ஷாக் கொடுத்த பிரபல பின்னணி...

ஏஆர் ரகுமான் இசையில் பாடியதால் இளையராஜா வாய்ப்பளிக்க மறுத்தார் – ஷாக் கொடுத்த பிரபல பின்னணி பாடகி… அதிர்ச்சியில் கோலிவுட்!

ஏ ஆர் ரகுமான் இசையில் பாடியதால், இளையராஜா தனக்கு வாய்ப்பு வழங்க மறுத்து விட்டதாக பின்னணி பாடகி மின்மினி கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

இசை என்றால் இளையராஜா

அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. 1980களில் தொடங்கி தற்போது வரை தனக்கே உரித்தான இசையால் உலகமெங்கும் ஏராளமான ரசிகர்களை சம்பாதித்துள்ளார். ஒரு காலத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், கார்த்திக், மோகன், ராமராஜன் படங்களில் தொடங்கி இப்போதுள்ள நடிகர்களும் இளையராஜாவின் கால் சீட்டுக்காக காத்திருக்கின்றனர்.

கிட்டத்தட்ட 5 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்திருக்கும் இளையராஜா, ஒரே நாளில் ஆறு படங்களுக்கு எல்லாம் இசை அமைத்திருப்பதாக பலர் தெரிவித்துள்ளனர். 1980 கால கட்டங்களில் வெளியான படங்களில் 75 சதவீதம் இளையராஜா படங்களாகவே இருந்தன. 1500 படங்களுக்கு இசையமைத்திருக்கும் இளையராஜா, இதுவரை ஐந்து முறை தேசிய விருதை வென்றிருக்கிறார். சமீபத்தில் அவரது பிறந்த நாளை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோலாகலமாக கொண்டாடினர்.

- Advertisement -

“சின்ன சின்ன ஆசை” மின்மினி

இவ்வாறு பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரரான இளையராஜா குறித்து பிரபல பின்னணி பாடகி மின்மினி குற்றம் சாட்டி இருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இளையராஜாவால் மீரா திரைப்படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமான மின்மினி, தேவர்மகன் படத்தில் ஒரு பாடலை பாடினார். மாசறு பொன்னே வருக என தொடங்கும் அந்த பாடலை, சுவர்ணலதா உடன் இணைந்து அவர் பாடினார்.

- Advertisement -

இதன் மூலம் பிரபலமான பின்னணி பாடகிகள் வரிசையில் மின்மினியும் இணைந்தார். இளையராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட மின்மினிக்கு ஏ ஆர் ரகுமானும் சரியான வாய்ப்பை வழங்கினார். மணிரத்னம் இயக்கத்தில் ரோஜா திரைப்படம் மூலம் ஏ ஆர் ரகுமான் அறிமுகமாக, அந்தப் படத்தில் இடம்பெற்ற சின்ன சின்ன ஆசை பாடலை பாடும் வாய்ப்பு மின்மினிக்கு கிடைத்தது. பட்டித் தொட்டி எங்கும் ஹிட் அடித்த அந்த பாடலால் மின்மினி புகழின் உச்சத்திற்கு சென்றார்.

இளையராஜா மீது பரபரப்பு புகார்

இந்த நிலையில் சமீபத்தில் மலையாள சேனலுக்கு பேட்டி கொடுத்த பாடகி மின்மினி, ஏ ஆர் ரகுமான் இசையில் தான் பாடியதால் இளையராஜா தனக்கு வாய்ப்பு வழங்க மறுத்து விட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். ஒரு பாடல் பதிவிற்காக தான் ஸ்டுடியோ சென்றிருந்தபோது இளையராஜா தண்ணி அங்கிருந்து போகச் சொல்லியதாகவும், அவர் வேறொருவர் இசையில் பாடத் தொடங்கி இருப்பதால் அங்கேயே தொடரட்டும் என்று கறாராக பேசியதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்து அழுத தன்னை ஸ்டூடியோவில் இருந்த பாடகர் மனோ தேற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

மின்மினி குற்றச்சாட்டால் உச்சகட்ட பரபரப்பு

இதைத்தொடர்ந்து அவர் பாடலில் கவனம் செலுத்த, மீண்டும் ஏ ஆர் ரகுமான் இசையில் கருத்தம்மா படத்தின் ஒரு பாடலை பாடினார். இந்த நிலையில் பின்னணி பாடகி மின்மினி, ஏ ஆர் ரகுமான் இசையில் பாடியதால் தான் இளையராஜா வாய்ப்பு வழங்கவில்லை என்று கூறியிருப்பது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதே சமயம் பின்னனி பாடகர்களான எஸ் பி பாலசுப்ரமணியம், மனோ, சித்ரா உள்ளிட்ட ஏராளமானோர் ஏஆர் ரகுமான் மற்றும் இளையராஜா இசையில் பாடி புகழ்பெற்றிருக்கும் போது, அவரை மட்டும் எப்படி இளையராஜா அவமதித்து இருப்பார் என அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனிடையே இளையராஜா குறித்து மின்மினி பேசி இருப்பது இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.

Most Popular