Friday, April 26, 2024
- Advertisement -
HomeEntertainmentரவுண்டு கட்டி நிற்கும் ஜெயம் ரவி படங்கள்… அடுத்ததாக அடங்கமறு இயக்குனருடனும் கூட்டணியாம்… இந்த வருடமே...

ரவுண்டு கட்டி நிற்கும் ஜெயம் ரவி படங்கள்… அடுத்ததாக அடங்கமறு இயக்குனருடனும் கூட்டணியாம்… இந்த வருடமே மூன்று படங்கள் வெளியாக வாய்ப்பு!

நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். வித்தியாசமான கதைகளங்கள் நிறைந்த படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வசூலில் சக்கை போடு போட்டது.

- Advertisement -

சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த அகிலன் படம் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள இறைவன் மற்றும் சைரன் திரைப்படங்கள் இந்த வருடமே வெளியாக உள்ளதாக தெரிகிறது. இதில் சைரன் படத்திற்காக அவர் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வலம் வருகிறார்.

தற்போது சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் பட இயக்குனர் எம். ராஜேஷ் படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இறைவன் படத்தில் நயன்தாராவும், சைரன் படத்தில் கீர்த்தி சுரேஷும் நடிக்கின்றனர்.

- Advertisement -

தொடர்ந்து தனது 32 வது படத்திற்காக வேல்ஸ் ஃபிலிம் தயாரிப்பு நிறுவனத்துடன் ஜெயம் ரவி இணைந்துள்ளார். அவரது கேரியரிலே மிகப்பிரம்மாண்ட படமாக உருவாகும் இந்தப் படத்தை, மிஸ்கின் உதவியாளரான புவனேஷ் இயக்குகிறார். இந்த படத்திற்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் தங்கவேலுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஜெயம் ரவியை வைத்து அடங்கமறு எனும் திரைப்படத்தை ஏற்கனவே இயக்கி இருந்தார்.

விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்தத் திரைப்படம் பாராட்டை பெற்றது. இந்த நிலையில் ஜெயம் ரவிக்கு அவர் மீண்டும் ஒரு கதையை கூறியதாகவும் இதில் நடிக்க நடிகர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Most Popular