Monday, April 29, 2024
- Advertisement -
Homeசினிமாரோலக்ஸை தொடர்ந்து மற்றொரு பெரிய இயக்குனருக்கு விலையுர்ந்த வாட்சை பரிசளித்துள்ள கமல் ஹாசன்.. !

ரோலக்ஸை தொடர்ந்து மற்றொரு பெரிய இயக்குனருக்கு விலையுர்ந்த வாட்சை பரிசளித்துள்ள கமல் ஹாசன்.. !

இந்தியன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இந்தியன் தாத்தாவாக வந்த கமல் ஹாசன் சாகாமல் தொலைபேசியை எடுத்து பேசியபோது தியேட்டரே அதிரியது. அப்போதே இராண்டம் பாகம் இருப்பதும் உறுதியாகியது. 20 வருடங்கள் கழித்து பார்ட் 2 படத்தின் அறிவிப்பை இயக்குனர் ஷங்கர்.

- Advertisement -

இந்தியன் 2 சந்தித்த பெரிய சிக்கல்

அறிவிப்பு வெளியாகி 2 வருடங்கள் மேல் ஆகிவிட்டது. இடையில் கிரேன் விபத்தால் பெரிய சிக்கலாகி ஒரு வருடம் கிட்ட ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. அதோடு நடுவில் லைகா நிறுவனம் படத்தை மொத்தமாக கைவிடவும் நினைத்தது. பின்னர் உதயநிதி ஸ்டாலினின் உதவியால் மீண்டும் படப்பிடிப்பை துவங்கினார் ஷங்கர்.

இந்தியன் 2 ஷூட்டிங் எப்போது முடியும் ?

எப்போதும் இல்லாத அளவிற்கு இயக்குனர் ஷங்கர் இம்முறை அதிக உழைப்பை கொடுத்துள்ளார். இந்தியன் 2 படத்தோடு ராம் சரண், கியாரா அத்வானி உட்பட பலர் நடிப்பில் ‘ கேம் சேஞ்சர் ’ எனும் படத்தையும் உருவாக்கி வருகிறார். இந்தியன் 2 அட்டவணை முடித்த மறுதினமே ராம் சரணின் படத்தை தொடர்ந்து ஓய்வில்லாமல் பணிபுரிந்துள்ளார். கடைசியாக தென்னாபிரிக்காவில் இருந்தவாறு ஷங்கர் புகைப்படத்தை வெளியிட்டார்.

- Advertisement -

அதன் பின்னர் சென்னை விமான நிலையத்தில் ஷூட்டிங் செய்ய சில அனுமதி சிக்கல் குறிகிட்டதால் ஷூட்டிங் தடைப்பட்டுள்ளது. விரைவில் அதை நிறைவு செய்து ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்கவிருக்கிறார் ஷங்கர். ஜூலை மாதத்திற்குள் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கமல்ஹாசன் இயக்குனர் ஹெச்.வினோத்துடனான ஷூட்டிங்கை செப்டம்பர் மாதம் துவங்குகிறார்.

- Advertisement -

ஷங்கருக்கு பரிசளித்த கமல்ஹாசன்

இந்தியன் 2 படத்தின் சில காட்சிகளை பார்த்த வியப்பில் நடிகர் கமல்ஹாசன் தன் இயக்குனர் ஷங்கருக்கு விலையுர்ந்த வாட்சை பரிசளித்துள்ளார். இது குறித்து அவர் தன் சமூக வலைதள பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். அவர் கூறுதயாவது, “ இந்தியன் 2 படத்தின் பிரதான காட்சிகளை இன்று பார்த்தேன். ஷங்கருக்கு என் உளமார்ந்த வாழ்த்துகள். இதுவே உங்கள் உச்சமாக இருக்கக் கூடாது என்பதும் என் அவா. காரணம், இதுதான் உங்கள் கலை வாழ்வின் மிக உயரமான நிலை. இதையே உச்சமாகக் கொள்ளாமல் திமிறி எழுங்கள். பல புதிய உயரங்கள் தேடி. ” என்றார்.

விக்ரம் படத்தின் அபார வெற்றிக்குப் பின் லோகேஷ் கனகராஜுக்கு காரும் களைமாக்ஸ் காட்சியில் மாஸாக தோன்றிய ரோல்ஸான சூர்யாவுக்கு 20 லட்சம் மதிப்புள்ள ஓர் வாட்சையும் பரிசளித்தார். அதே போல இயக்குனர் ஷங்கருக்கும் விலையுர்ந்த வாட்சை பரிசாக கொடுத்துள்ளார். ஆனால் படத்தின் வெளியீட்டுக்கு முன்பே !

கமல்ஹாசன், எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், சமுத்திரகனி, விவேக் என ஓர் நட்சத்திர பட்டாளமே இணைந்து நடிக்கும் இந்தப் படம் வழக்கம் போல ஷங்கரின் பாணியில் மிக பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. அடுத்த ஆண்டு கோடைக்குள் வெளியாகும்.

Most Popular