Monday, May 6, 2024
- Advertisement -
HomeEntertainmentஜெயம் ரவி கேரியரிலேயே பிரம்மாண்டமாக உருவாகும் திரைப்படம்… ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் மூன்று ஹீரோயின்களாம்… உற்சாகத்தில்...

ஜெயம் ரவி கேரியரிலேயே பிரம்மாண்டமாக உருவாகும் திரைப்படம்… ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் மூன்று ஹீரோயின்களாம்… உற்சாகத்தில் ரசிகர்கள்!

நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். வித்தியாசமான கதைகளங்கள் நிறைந்த படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் நடித்த பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களும் வெற்றியானதை தொடர்ந்து அவரின் மார்கெட் உயர்ந்து உள்ளது.

- Advertisement -

படத்தின் ரிலீஸ்க்கு முன்பே 70 கோடி ரூபாய் வரை ஜெயம் ரவி படத்திற்கு இப்போது பிஸினஸ் நடைபெற்று இருக்கிறதாம். இதைத்தொடர்ந்து தனது சம்பளத்தை அவர் உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த அகிலன் படம் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள இறைவன் மற்றும் சைரன் திரைப்படங்கள் இந்த வருடமே வெளியாக உள்ளதாக தெரிகிறது. இதில் சைரன் படத்திற்காக அவர் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வலம் வருகிறார்.

- Advertisement -

தற்போது சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் பட இயக்குனர் எம். ராஜேஷ் படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இறைவன் படத்தில் நயன்தாராவும், சைரன் படத்தில் கீர்த்தி சுரேஷும் நடிக்கின்றனர்.

- Advertisement -

இந்த நிலையில் தனது 32 வது படத்திற்காக வேல்ஸ் ஃபிலிம் தயாரிப்பு நிறுவனத்துடன் ஜெயம் ரவி இணைந்துள்ளார். அவரது கேரியரிலே மிகப்பிரம்மாண்ட படமாக உருவாகும் இந்தப் படத்தை, மிஸ்கின் உதவியாளரான புவனேஷ் இயக்குகிறார்.

இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மூன்றாவதாக ஹீரோயினை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular