Monday, April 29, 2024
- Advertisement -
Homeசினிமாலியோ அப்டேட் மெளனத்தை கலைத்த லோகேஷ் கனகராஜ்.. இனி ஒரு மாசத்துக்கு ஜாலி தான்

லியோ அப்டேட் மெளனத்தை கலைத்த லோகேஷ் கனகராஜ்.. இனி ஒரு மாசத்துக்கு ஜாலி தான்

தமிழ் சினிமாவில் தற்போது முதன்மையான இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது தளபதி விஜய் உடன் இணைந்து லியோ திரைப்படத்தை எடுத்து முடித்து விட்டார். இந்த படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வருகிறது.

- Advertisement -

இந்த நிலையில் லியோ குறித்து லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக மௌனத்தை கலைத்துள்ளார். தென்னிந்திய சினிமா விருதுகள் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு விக்ரம் திரைப்படத்திற்காக விருது வழங்கப்பட்டது.

அப்போது பேசிய லோகேஷ் லியோ குறித்து பேசினார். கடந்த ஆண்டு மாஸ்டர் திரைப்படத்திற்காகவும் நடப்பாண்டில் விக்ரம் திரைப்படத்திற்காகவும் விருது வாங்கிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.லியோ குறித்து அனைவரும் கேட்டு வருகிறார்கள்.

- Advertisement -

படத்தை ஏற்கனவே முடித்து விட்டோம். எனினும் சில பணிகள் பாக்கியிருந்ததால் அதற்காக தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தோம். தற்போது அந்த பணிகள் எல்லாம் முடிந்துவிட்டோம். ஏற்கனவே படம் ரிலீசாவதற்கு முப்பது நாட்கள் முன்பில் இருந்து படத்தின் அப்டேட்டுகளை வெளியிட திட்டமிட்டு இருந்தோம்.

- Advertisement -

தற்போது பணிகள் முடிந்து விட்டதால், ஞாயிற்றுக்கிழமை முதல் அப்டேட் வரிசையாக வரும் என்று கூறினார். அந்த வகையில் இன்று லியோ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்து அப்டேட் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த பாடல் விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பேசிய லோகேஷ் கனகராஜ் இயக்குனர் மணிரத்தினரிடம் கமல்ஹாசனின் 234-வது படம் குறித்து ஏதேனும் அப்டேட் கொடுங்கள் சார் என்று கேட்டார்.

அதற்கு மனிதன் படத்தின் தயாரிப்பாளரான கமல் தான் அது குறித்து பதில் அளிக்க வேண்டும் என்று கூறினார். இதற்கு பதில் அளித்த கமல் மணிரத்தினம் படத்திற்காக தாடி வளர்ப்பதாகவும் அதுதான் தற்போது அப்டேட் என்றும் காமெடியாக கூறினார். மேலும் நாயகன் படத்தில் தாங்கள் எப்படி பணியாற்றினோமோ அதை போல் இந்த படத்திலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்றும் கமல் தெரிவித்தார்.

Most Popular