Sunday, April 28, 2024
- Advertisement -
HomeEntertainment4 படங்களுக்கு அட்வான்ஸ் வாங்கிய மாரி செல்வராஜ்.. சூர்யா பட தயாரிப்பு நிறுவனம் அதிரடி அறிவிப்பு

4 படங்களுக்கு அட்வான்ஸ் வாங்கிய மாரி செல்வராஜ்.. சூர்யா பட தயாரிப்பு நிறுவனம் அதிரடி அறிவிப்பு

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். முதல் படத்திலேயே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கவனம் ஈர்த்த நிலையில், அடுத்த படத்திலேயே நடிகர் தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். அந்த படமும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றியை பெற்றது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் படத்தை இயக்கினார். கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பிலும் அசத்த, ரூ.70 கோடிக்கும் அதிக வசூலை ஈட்டி சாதனை படைத்தது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், கதையின் அரசியல் விவகாரம் பலராலும் பாராட்டப்பட்டது.

இந்த படத்திற்கு பின் இயக்குநர் மாரி செல்வராஜ் சொந்த தயாரிப்பில் சிறுவர்களை வைத்து வாழை என்ற இயக்கியுள்ளார். டிஸ்னி + ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து மாரி செல்வராஜ் தயாரித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் தயாரிப்பில் அவரை நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

இந்த நிலையில் சிங்கம் 2, சர்தார் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே விக்ரம் மகன் துருவ் நடிப்பில் கபடியை மையமாக வைத்து நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்திற்காக இந்த படத்தை இயக்கி வருகிறார். மொத்தமாக 4 படங்களில் மாரி செல்வராஜ் கைகளில் வைத்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இதுமட்டுமல்லாமல் நடிகர் விக்ரமிற்கு ஒரு கதை ஒன்றை கூறி மாரி செல்வராஜ் ஓகே செய்து வைத்துள்ளார். இதனால் தமிழ் சினிமாவின் உச்ச இயக்குநர்களில் ஒருவராக மாரி செல்வராஜ் உயர்ந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் அவருக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Most Popular