Thursday, May 2, 2024
- Advertisement -
HomeEntertainmentதுணிவு காட்சிகள் குறைப்பு.. வாரிசுக்கு கூடுதல் தியேட்டர்கள் கிடைத்தது !

துணிவு காட்சிகள் குறைப்பு.. வாரிசுக்கு கூடுதல் தியேட்டர்கள் கிடைத்தது !

- Advertisement -

தமிழகத்தில் நேற்று வாரிசு துணிவு திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. யாரும் கணிக்காத வகையில் இரண்டு படங்களும் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. முதல் நாளான நேற்று வேலை நாள் ஆக இருந்தாலும் ரசிகர்கள் அதிக அளவில் இரண்டு திரைப்படங்களையும் பார்த்தன் மூலம் வசூல் வேட்டை நடந்தது.

ஆனால் இரண்டாவது நாள் இரண்டு திரைப்படங்களுக்குமே கூட்டம் குறைந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் துணிவு திரைப்படத்திற்கு காட்சிகளும் திரையரங்குகளும் குறைக்கப்பட்டு தற்போது வாரிசுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால் வாரிசை விட துணிவு தான் அதிக திரையரங்குகளில் வெளியானது. தற்போது முதல் நாள் முடிந்து விட்டது என்பதால் தற்போது குடும்ப ரசிகர்கள் அதிக அளவில் படத்தை பார்க்க வருவார்கள். இதன் காரணமாக துணிவுக்கு வழங்கப்பட்டுள்ள காட்சிகள் தற்போது வாரிசுக்கு கிடைத்திருக்கிறது.

- Advertisement -

இது குறித்து விளக்கம் அளித்துள்ள திரையரங்க உரிமையாளர்கள் துணிவு திரைப்படத்திற்கு அதிக ஸ்கிரீன் வழங்கப்பட்டதன் மூலம் அனைத்து ரசிகர்களும் படத்தை பார்த்து விட்டதால் தற்போது இரு படங்களுக்கும் சரிசமமாக காட்சிகளை ஒதுக்க முடிவு எடுத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.  சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான மாயாஜாலில் வாரிசுக்கு 40 காட்சிகளும் துணிவுக்கு 34 காட்சிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதேபோன்று சென்னை வெற்றி திரையரங்கில் வாரிசுக்கு கூடுதலாக இரண்டு காட்சிகள் கிடைத்திருக்கிறது. நெல்லையை அடுத்த காவல்கிணறு பகுதியில் இயங்கி வரும் சக்கரவர்த்தி சினிமாஸில் வாரிசுக்கு 16 காட்சிகளும் துணிவுக்கு ஆறு காட்சிகளும் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று வாரிசுக்கு குறைவான திரையரங்குகள் ஒதுக்கப்பட்ட சேலத்தில் தற்போது ஆஸ்கார் திரையரங்கில் கூடுதல் காட்சிகள் வழங்கப்பட்டிருக்கிறது.

Most Popular