Saturday, April 27, 2024
- Advertisement -
HomeEntertainmentசிம்புவுக்கு ஜோடியான மிருணாள் தாக்கூர், கீர்த்தி சுரேஷ்.. படப்பிடிப்பை தொடங்கும் தேசிங்கு பெரியசாமி!

சிம்புவுக்கு ஜோடியான மிருணாள் தாக்கூர், கீர்த்தி சுரேஷ்.. படப்பிடிப்பை தொடங்கும் தேசிங்கு பெரியசாமி!

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கவுள்ளார். நடிகர் ரஜினிகாந்திற்கு கூறிய கதையை படமாக்க தாமதமானதால், அதே கதையை அப்படியே சிம்புவுக்கு கூறி ஒகே செய்துள்ளார் தேசிங்கு பெரியசாமி. ரூ.100 பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

- Advertisement -

பத்து தல படத்திற்கு பின் இந்த படத்திற்காக நடிகர் சிலம்பரசன் வெளிநாட்டில் சண்டை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதேபோல் படத்திற்காக பிரத்யேக லுக், ஸ்டைல் என்று அனைத்தையும் மாற்றியுள்ளார். அதுமட்டுமல்லாமல் ராஜ் கமல் நிறுவனத்தில் ஏற்கனவே படத்திற்கான விஎஃப்எக்ஸ் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் எஸ்டிஆர்48 படத்தில் சிலம்பரசன் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அதற்கான அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்த மாத இறுதியில் சிலம்பரசனின் 48வது படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ள நிலையில், நடிகர் மற்றும் நடிகைகள் அடுத்தடுத்து ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகின்றனர்.

- Advertisement -

இந்த படத்தில் சிலம்பரசனுக்கு இரு நாயகிகள் ஜோடியாக நடிக்கவுள்ளனர். அதன்படி நடிகர் கீர்த்தி சுரேஷ் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தெரிய வந்தது. இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் முக்கிய நாயகியாக வலம் வரும் மிருணாள் தாக்கூரை ஒப்பந்தம் செய்ய படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

ஏற்கனவே அவர் நடித்த சீதா ராமம், ஹாய் நான்னா உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது எஸ்டிஆர் 48 படத்திலும் மிருணாள் தாக்கூர் இணையவுள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது. பாலிவுட் நடிகை படக்குழுவில் இருந்தால் இந்தியிலும் விளம்பரங்கள் செய்ய வசதியாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

Most Popular