Saturday, May 4, 2024
- Advertisement -
HomeEntertainmentபுஷ்பா தயாரிப்பாளர்களுக்கு ஓகே சொன்ன அஜித்குமார்.. ஆதிக் ரவிச்சந்திரன் கதையும் பிடிச்சு போச்சாம்.. திடீரென நடந்த...

புஷ்பா தயாரிப்பாளர்களுக்கு ஓகே சொன்ன அஜித்குமார்.. ஆதிக் ரவிச்சந்திரன் கதையும் பிடிச்சு போச்சாம்.. திடீரென நடந்த மாற்றம்..

நடிகர் அஜித் குமார் துணிவு படத்திற்கு பின் நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்த நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் விக்னேஷ் சிவன் கதை லைகா நிறுவனத்திற்கு பிடிக்காமல் இருந்ததால், அவர் அஜித் குமார் படத்தில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின் இயக்குநர் மகிழ் திருமேனி படத்தில் அஜித் குமார் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

அஜித் குமார் பிறந்தநாளன்று விடா முயற்சி படத்தின் டைட்டில் லுக்கும் வெளியிடப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில், நாயகிகளாக த்ரிஷா மற்றும் ரெஜினா இருவரும் நடிப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் வில்லனாக அர்ஜூன் மற்றும் பிக் பாஸ் புகழ் ஆரவ் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜர்பைஜானில் விடாமுயற்சி படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வந்த நிலையில், திடீரென கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் உயிரிழந்தார். இதன்பின் விடாமுயற்சி படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடர்ந்து நடந்து வருகிறது. கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கும் மேலாக தொடர் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இதனால் ஜனவரி மாதத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க இயக்குநர் மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் அஜித்குமார் அடுத்ததாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

தற்போது விஷால், எஸ்ஜே சூர்யா இணைந்து நடித்த மார்க் ஆண்டனி படத்தின் மூலம் பெரிய ஹிட் கொடுத்துள்ள நிலையில், அடுத்ததாக அஜித் குமாரிடம் கதை ஒன்றை கூறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தெலுங்கில் புஷ்பா, ஜனதா கரேஜ், ஸ்ரீமந்துடு, டியர் காம்ரேட் என்று உச்ச நடிகர்களுடன் ஏராளமான படங்களை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது புஷ்பா 2, பவன் கல்யாண் 28 படம், சிரஞ்சீவி படம் என்று ஏராளமான படங்களை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் கோலிவுட்டில் அஜித் குமார் மூலம் கால் பதிக்கவுள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.

Most Popular