Sunday, April 28, 2024
- Advertisement -
HomeEntertainmentசென்னை... வடசென்னை... மீண்டும் இணையும் மெட்ராஸ் கூட்டணி... அழுத்தமான கதைக்களத்தை கையில் எடுக்கும் பா ரஞ்சித்...

சென்னை… வடசென்னை… மீண்டும் இணையும் மெட்ராஸ் கூட்டணி… அழுத்தமான கதைக்களத்தை கையில் எடுக்கும் பா ரஞ்சித்…

தமிழ் சினிமாவில் தற்போது பிஸியாக இருக்கும் நடிகர்களில் மிக முக்கியமானவர் கார்த்தி. பருத்திவீரனில் தொடங்கிய அவரது பயணம், பொன்னியின் செல்வன் வரை தொடர்ந்து பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. கதைகளை சரியாக தேர்ந்தெடுத்து அது சரியாக மக்களிடத்தில் கொண்டு போய் சேர்ப்பதில் வல்லவராய் கார்த்தி திகழ்கிறார்.

- Advertisement -

நான் மகான் அல்ல, பையா, சிறுத்தை, கொம்பன், மெட்ராஸ், கடைக்குட்டி சிங்கம், தீரன், கைதி என கார்த்தியின் வெற்றிகளை அடுக்கிக் கொண்டே போகலாம். சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்த அவர், வந்தியத்தேவன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருந்தார்.

குறிப்பாக படத்தின் முதல் பாகத்தில், கதையை சுமந்து செல்லும் கதாநாயகனாக இயல்பாக நடித்து ரசிகர்களை அசர வைத்திருந்தார். இதுவரை தனது திரையுலக கேரியரில் இயக்குனர் முத்தையாவிடம் மட்டுமே கொம்பன், விருமன் என இரண்டு படங்களில் கார்த்தி நடித்திருக்கிறார். மற்ற அனைத்து இயக்குனர்களிடமும் ஒருமுறை மட்டுமே பணிபுரிந்து அதனை வெற்றி திரைப்படமாக மாற்றும் சூட்சமத்தையும் நடிகர் அறிந்து வைத்துள்ளார்.

- Advertisement -

தற்போது தனது 25வது படத்தை எட்டி இருக்கும் அவர், இயக்குனர் ராஜு முருகனுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். ஜப்பான் என இந்த திரைப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான ஜானரில் உருவாகும் இந்த திரைப்படம், வரும் தீபாவளி அன்று வெளியாகிறது.இதைத்தொடர்ந்து சூது கவ்வும் இயக்குனர் நலன் குமாரசாமி உடன் கார்த்தி இணைந்துள்ளார். இந்த திரைப்படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதைத்தொடர்ந்து 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் உடன் ஒரு படம், பிறகு சர்தார் படத்தின் இரண்டாம் பாகம், கைதி படத்தின் இரண்டாம் பாகம் என அவர் பிஸியாக இருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது அவர் மீண்டும், இயக்குனர் பா ரஞ்சித் உடன் இணையப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான மெட்ராஸ் திரைப்படம், தமிழ் சினிமாவை புதிய தளத்திற்கு எடுத்துச் சென்றது. ஒரு சுவரை வைத்து அதற்கு பின்னால் இருக்கும் அரசியலை நெத்தியடி கொடுத்தார் போல் சொல்லி அசர வைத்திருந்தார் பா ரஞ்சித். மிகப்பெரிய வெற்றியை அந்த திரைப்படம் பெறுவதற்கு கார்த்தியின் நடிப்பும் சந்தோஷ் நாராயணனின் இசையும் ஒரு காரணமாக இருந்தது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த கூட்டணி மறுபடியும் இணையப் போவதாக வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. பா ரஞ்சித் இப்போது விக்ரமின் தங்கலான் படத்தில் பிசியாக இருக்கிறார். சார்பட்டா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்த பிறகு அவர் கார்த்தியுடன் இணைவார் என கூறப்படுகிறது.

Most Popular