Tuesday, April 30, 2024
- Advertisement -
Homeசினிமாபிரபாஸ்க்கு இப்படி ஒரு நிலைமையா? ஆதிபுருஷ் வச்ச ஆப்பு.. சலார் படத்தின் தாமதத்திற்கு பின்னணி இது...

பிரபாஸ்க்கு இப்படி ஒரு நிலைமையா? ஆதிபுருஷ் வச்ச ஆப்பு.. சலார் படத்தின் தாமதத்திற்கு பின்னணி இது தான்

பாகுபலி வெற்றிக்குப் பிறகு இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக பிரபாஸ் மாறிவிட்டார். பாகுபலி திரைப்படம் இந்திய சினிமாவிலேயே அதிக வசூல் படைத்து சாதனை படைத்தது. இதன் பிறகு பிரபாஸ் நடித்த அனைத்து படத்திற்கும் இந்திய அளவில் ஒரு நல்ல மார்க்கெட் உருவானது.

- Advertisement -

எனினும் நடித்தால் பெரிய பட்ஜெட்டில் தான் நடிப்பேன். கதை கூட தேவையில்லை என்று பிரபாஸ் தப்பு கணக்கு போட்டு விட்டார். இதன் காரணமாக அவர் நடித்த எந்த படங்களும் பட்ஜெட் அதிகமாக இருந்தாலும் கதை சரியாக இல்லை. இதனால் அனைத்து படங்களும் தோல்வியை தழுவியது.

சாகோ,ராதே ஷ்யாம் என தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த பிரபாஸ் ஆதிபுரூஸ் படத்தில் செமையாக வாங்கி கட்டிக் கொண்டார். ராமர் பெயரை பயன்படுத்தி கல்லா கட்டலாம் என நினைத்த படக்குழுவுக்கு சரியான பாடம் கற்றுக் கொடுத்தது பாலிவுட் சினிமா.

- Advertisement -

இந்த நிலையில் பிரபாஸ் தற்போது கேஜிஎப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தை தான் மிகவும் நம்பி இருக்கிறார். இந்த படம் வரும் செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் இந்த படம் தற்போது தள்ளி போக உள்ளது.

- Advertisement -

இதற்கு காரணம் இந்த படத்தை யாரும் பெரிய பணம் கொடுத்து வாங்க முன் வரவில்லை. கே ஜி எஃப் இயக்குனர் என்பதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் தொடர்ந்து மூன்று படங்கள் பிரபாஸுக்கு சரியாக போகவில்ல. இதனால் இந்த படத்தை பெரிய பணம் கொடுத்து வாங்க தயக்கம் இருக்கிறது. மேலும் ஓடிடி உரிமம் 200 கோடி ரூபாய் வரை பட குழு கேட்கிறது.

ஆனால் பிரபாஸின் முந்தைய படமான ஆதிபுருஷ் மிகப்பெரிய தோல்வியை ஒடிடியிலும் தழுவு இருப்பதால் அவ்வளவு பணம் கொடுத்து வாங்க யாரும் முன் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பட குழு தற்போது படத்தை தள்ளி வைக்க முயற்சி செய்து வருகிறது. இதனால் சூப்பர் ஸ்டாராக இருந்த பிரபாஸ் தற்போது தடுமாறி வருவது அவருடைய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Most Popular