Tuesday, May 7, 2024
- Advertisement -
Homeசினிமா50 வயதில் அப்பாவான பிரபுதேவா.. ! முதல் மனைவியை பிரிந்த நிலையில் எப்படி சாத்தியம்?

50 வயதில் அப்பாவான பிரபுதேவா.. ! முதல் மனைவியை பிரிந்த நிலையில் எப்படி சாத்தியம்?

நடிகர் இயக்குனர் நடன இயக்குனர் என பல பரிணாமங்களை வைத்திருப்பவர் நடிகர் பிரபுதேவா. தமிழ் சினிமாவில் மைக்கேல் ஜாக்சன் என பெயர் வாங்கிய பிரபுதேவாவுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

- Advertisement -

பல பாலிவுட் படத்தில் பிரபுதேவா இல்லாமல் பாடல்களுக்கு நடனமே அமைக்க முடியாது. மேலும் தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்திலும் பல வெற்றி படங்களை பிரபுதேவா இயக்கி இருக்கிறார். இந்த நிலையில் பிரபுதேவா ரம்லத் என்ற தன் உடன் நடனமாடிய பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

இந்த ஜோடிக்கு மூன்று குழந்தைகள் இருந்த நிலையில் ஒருவர் பல ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் மனம் உடைந்த பிரபுதேவாவுக்கும் அவருடைய மனைவி ரமலத்திற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

- Advertisement -

மேலும் பிரபுதேவா தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் மிகவும் நெருக்கமாக இருந்ததாக செய்திகள் வெளியானது. அந்த தருணத்தில் வில்லு திரைப்படத்தில் நடிகை நயன்தாராவுடன் பிரபுதேவா ஊர் சுற்றியதாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல் வெளியாகின.

அந்த நிலையில் தான் நயன்தாராவுடன் திடீர்னு பிரபுதேவாவுக்கு காதல் முறிந்தது. இந்த நிலையில் சிங்கிளாக வாழ்ந்து வந்த பிரபுதேவா அண்மையில் மருத்துவர் ஹிமானி சிங்குடன் காதல் ஏற்பட்டது. இதில் அடுத்து இருவரும் திருப்பதியில் திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த மூன்று ஆண்டாக வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் இருவருக்கும் பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில் நான்காவது முறையாக நடிகர் பிரபுதேவா தந்தையாக இருக்கிறார்.இதனால் பிரபுதேவாவுக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Most Popular