Sunday, April 28, 2024
- Advertisement -
HomeEntertainmentநடன இயக்குனர் சாண்டியை வைத்து படம் எடுக்கும் பிரேமம் இயக்குனர்… காதல் ரசம் சொட்ட சொட்ட...

நடன இயக்குனர் சாண்டியை வைத்து படம் எடுக்கும் பிரேமம் இயக்குனர்… காதல் ரசம் சொட்ட சொட்ட உருவாகும் படத்திற்கு இசையமைக்கிறார் இளையராஜா!

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அடுத்ததாக நடன இயக்குனர் சாண்டியுடன் இணைந்து படம் எடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

நேரம் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம்

நேரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். நிவின் பாலி, நஸ்ரியா ஆகியோர் நடித்த இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. நேரம் சரியாக கூடும் நேரத்தில் ஒருவரின் வாழ்க்கை எவ்வாறாகலாம் மாறுகிறது என்பதை சுவாரசியத்துடன் காட்சிப்படுத்தியிருந்தார் அல்போன்ஸ் புத்திரன். 2013 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் நிவின் பாலி மற்றும் நஸ்ரியாவிற்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்த பிரேமம்

நேரம் திரைப்படத்தை தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு வெளியானது பிரேமம் திரைப்படம். நிவின் பாலி, மடோனா, சாய் பல்லவி ஆகியோர் நடிப்பின் வெளியான இந்த திரைப்படம் மலையாளம் மட்டும் இல்லாமல் தமிழ் மொழியிலும் ஹிட் அடித்தது. குறிப்பாக மலர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சாய் பல்லவியின் நடிப்பும், தமிழ் ரசிகர்களுக்கு எளிதில் புரியும் விதத்தில் எடுக்கப்பட்ட காட்சி அமைப்புகளும் படத்தை வேறொரு தளத்திற்கு எடுத்துச் சென்றது. ஆட்டோகிராப் திரைப்படத்தின் சாயலாக பிரேமம் இருந்தாலும், நுணுக்கமான காட்சி அமைப்புகளும், ரசனையான காதல் காட்சிகளும் படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டியது. சென்னையில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ஏகோபித்த வரவேற்பை பெற்ற பிரேமம் திரைப்படத்திற்கு, காதலர்கள் கூட்டம் கூட்டமாக சென்றனர். இப்போதும் காதலர் தினத்தில் சென்னையில் ஏதாவது ஒரு திரையரங்குகளில் பிரேமம் திரையிடப்பட்டு வருகிறது.

- Advertisement -

கோல்ட் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த இயக்குனர்

2015 ஆம் ஆண்டுக்கு பிறகு இயக்கத்திற்கு மிகப்பெரிய இடைவெளி விட்ட அல்போன்ஸ் புத்திரன், அடுத்ததாக கோல்ட் படத்தை எடுக்க ஆரம்பித்தார். உடல்நல பிரச்சனையால் பாதிக்கப்பட்ட அவர் மெலிந்த உடலுடன் காட்சி அளிக்க, சமூக வலைதளத்தில் அந்த புகைப்படங்கள் வைரலாகியது. அதே சமயத்தில்தான் கோல்ட் படம் தொடர்பான அறிவிப்பும் வெளியானது. பிரித்திவிராஜ் நயன்தாரா ஆகியோர் நடிப்பில் உருவான அந்த திரைப்படம், பிரேமம் படத்தின் தாக்கத்தால் மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது திரைப்படம், அல்போன்ஸ் புத்திரனுக்கு ரீ என்ட்ரியாக அமையும் என் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வியை தழுவியது கோல்ட்.

- Advertisement -

மீண்டும் தமிழில் அல்போன்ஸ் புத்திரன்

எதிர்பார்த்த வரவேற்பை கோல்ட் படம் எடுக்க தவறியதால், அடுத்த படத்தை கவனமுடன் எடுக்க திட்டமிட்டு இருக்கிறார் அல்போன்ஸ் புத்திரன். தனக்கே உரித்தான காதல் காட்சிகளுடன் முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்தே அவர் படம் எடுக்க இருக்கிறாராம். இதற்கான படப்பிடிப்பும் சென்னையில் ஆரம்பமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடன இயக்குனர் சாண்டி நடிப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அல்போன்ஸ் முதலில் அடுத்த படம் குறித்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Most Popular