Sunday, April 28, 2024
- Advertisement -
HomeEntertainmentலெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாகும் பிரியா ஆனந்த்? துரை செந்தில்குமாருடன் மீண்டும் கூட்டணி

லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாகும் பிரியா ஆனந்த்? துரை செந்தில்குமாருடன் மீண்டும் கூட்டணி

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் தலைவரான சரவணன் விளம்பர படங்கள் மூலமாக மக்களின் கவனத்தை ஈர்த்தார். அதிலும் ஹன்சிகாவுடன் அவர் நடித்த விளம்பரங்கள் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்தது. இதனால் லெஜண்ட் சரவணன் விரைவில் சினிமாவில் களமிறங்குவார் என்று பார்க்கப்படுகிறது. அதன்படி விளம்பர பட இயக்குநர் ஜேடி – ஜெர்ரி கதைக்கு ஓகே சொன்னார் சரவணன்.

- Advertisement -

சிவாஜி படத்தின் கதையை அப்படி பட்டி டிங்கரிங் செய்த லெஜண்ட் என்று படத்தை உருவாக்கினார்கள். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு 10க்கும் அதிகமான நடிகைகள் வந்து ஆச்சரியம் கொடுத்தனர். பிரம்மாண்டமாக உருவாகிய இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கிண்டல் செய்வதற்கு மட்டுமே சில ரசிகர்கள் திரையரங்குகள் பக்கம் ஒதுங்கினர்.

இதனால் லெஜண்ட் திரைப்படம் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்றார் சரவணன். இதனிடையே தாடி வைத்து புதிய லுக்கிற்கு மாறினார். இதனால் லெஜண்ட் சரவணன் அடுத்த படத்திற்காக தயாராகி வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இயக்குநர் துரை செந்தில்குமார் கதை லெஜண்ட் சரவணனுக்கு மிகவும் பிடித்தது.

- Advertisement -

எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாஸ் படங்களை தொடர்ந்து துரை செந்தில்குமார் சூரி, சசிக்குமார் நடிப்பில் கருடன் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்ததாக சரவணன் நடிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு கதாநாயகியாக நடிக்க முன்னணி நடிகைகள் பலரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

- Advertisement -

இருப்பினும் தமிழில் நடித்துள்ள நாயகிகள் பலரும் மிரண்டு ஓடுவதால், தெலுங்கு பக்கம் இருக்கும் நாயகிகளை அழைத்து வர ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னணி பட்டியலில் பிரியா ஆனந்த், யாஷிகா ஆனந்த், பிரக்யா ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Most Popular