Tuesday, May 7, 2024
- Advertisement -
Homeசினிமாஅடப்பாவமே.. அமீர் கதையை திருடி படம் செய்துள்ள ரஜினி.. அப்பா & மகள் ஐஸ்வர்யா ரஜினகாந்த்...

அடப்பாவமே.. அமீர் கதையை திருடி படம் செய்துள்ள ரஜினி.. அப்பா & மகள் ஐஸ்வர்யா ரஜினகாந்த் செய்த துரோகம்.. !

அண்மையில் கோலிவுட்டில் மிகவும் பரபரப்பாக பேசப்படும் விஷயம் பருத்திவீரன் சிக்கல் தான். தயாரிப்பாளார் ஞானவேல் ராஜா மற்றும் சூர்யா குடும்பத்தினர் இயக்குனர் அமீரின் மேல் பழி போட அது பெரிய அளவில் பிரச்சினையாக உருவெடுத்தது. அமீருக்கு சாதகமாக பருத்திவீரன் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த சமுத்திரகனி, நடிகர் சசிகுமார், பொன்வண்ணன் உட்பட பலர் குரல் கொடுத்துள்ளனர்.

- Advertisement -

சூர்யா குடும்பத்தினர் வாயே திறக்காமல் இருப்பது அமீர் அவர்கள் பக்கம் நியாயம் இருப்பதை உறுதி செய்கிறது. சூர்யாவின் பினாமி பெயரில் இருக்கும் நிறுவனம் இயக்குனர் அமீருக்கு துரோகம் செய்தது போல அமைதியாக ரஜினிகாந்த் அவர்களும் ஒரு சம்பவத்தைச் செய்துள்ளார். சமூக வலைத்தளத்தில் இப்போது அது தான் ட்ரெண்டிங்.

பழைய நேர்காணல் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அதில் அமீர் யோகி படத்திற்கு முன் ரஜினிகாந்த் அவர்களிடம் கதை சொன்னதைப் பற்றி விவரித்து இருந்தார். அவர் கூறுதயாவது, “ ரஜினி சாரிடம் நான் சொன்னது ஒரு வரலாற்றுக் கதை. அக்கதை என்னவென்றால், மக்களுக்காக போராடிய ஒரு வீரன் அம்மக்கள் முன்னரே அவர்களுக்காக பலி கொடுக்கப்படுகிறார். பின்னர் அவரது வாரிசு பல ஆண்டுகள் கழித்து மீண்டும் மக்களைக் காப்பற்றி உண்மையை வெளியே கொண்டுவருகிறார். ”

- Advertisement -

“ இக்கதையை நான் காட்சிகளாக அவரிடம் சொன்னேன். ரஜினி சாருக்கு மிகவும் பிடித்துவிட்டது. இப்படத்தை கமல் சார் தயாரித்தால் உங்களுக்கு சம்மதமா என்றும் கேட்டார். நான் அது பெரிய சந்தோஷம் சார் என்றேன். இதே கதையை விஜய்யிடமும் சொன்னேன். அவருக்கும் பிடித்திருந்தது ஆனால் நான் தான் அவருக்கு இக்கதை செய்யும் அளவு பக்குவம் வரும் வரை காத்திருக்கச் சொன்னேன். அதன் பின்னர் அவரும் அடுத்தக் கட்டத்திற்கு சென்றுவிட்டார். ” என்றார்.

- Advertisement -

இயக்குனர் அமீரிடம் அந்தக் கதை என்ன ஆனது எனக் கேட்டப் போது, அது அப்படியே ஓரமாக இருப்பதாகக் கூறினார். அமீர் சொன்ன இந்தக் கதை தான் கோச்சடையான். அவர் சொன்னக் கதை படமாக வந்ததை அவர் அறியவில்லையா அல்ல வெளியில் சொன்னால் தவறாக இருக்குமா என எண்ணி சொல்லாமல் இருக்கிறாரா எனத் தெரியவில்லை. அனிமேஷன் வடிவில் வெளியான கோச்சடையான் படத்தில் கதை ரஜினிகாந்த் உடையது எனக் குறிப்பிட்டு இருக்கும். இயக்கம் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த் அவர்கள் மேல் அடுத்தடுத்து கதைத் திருட்டு குற்றச்சாட்டுகள் போடப்பட்டு வருகின்றன. லோகேஷ் கனகராஜுடன் ஸ்னைப்பர் துப்பாக்கி கொண்ட ஓர் ஆக்க்ஷன் சீன் கேட்டுள்ளார். அது ஜெயிலர் படத்தில் இடைவேளைக் காட்சியாக அமைக்கப்பட்டு இருக்கும். தற்போது ஒரு காட்சி இல்லை மொத்த கதையுமே திருடியுள்ளார். இது அடுத்து எப்போது பெரிய சிக்கலாக மாறும் எனப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Most Popular