Tuesday, May 7, 2024
- Advertisement -
Homeசினிமாபேன் இந்திய அரசியல் படத்தில் செல்வராகவன், யோகி பாபு

பேன் இந்திய அரசியல் படத்தில் செல்வராகவன், யோகி பாபு

துள்ளுவதோ இளமை என்று திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர் செல்வராகவன். இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகனான செல்வராகவன் தன்னுடைய தம்பியான தனுஷையே கதாநாயகனாக வைத்து முதல் திரைப்படத்தை இயக்கினார்.

- Advertisement -

துள்ளுவதோ இளமை திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு தொடர்ந்து காதல் கொண்டேன், செவன் ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மாலை நேரத்து மயக்கம், ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம், மயக்கம் என்ன, நானே வருவேன், என் ஜி கே,நெஞ்சம் மறப்பதில்லை போன்று பல திரைப்படங்களை இயக்குனர் செல்வராகவன் இயக்கி இருக்கிறார்.

இதில் இவர் நிறைய திரைப்படங்கள் தன் தம்பி தனுஷை வைத்து அந்த திரைப்படங்கள் எல்லாம் தனுஷின் வாழ்விலும் பெரிய திருப்புமுனையாக அமைந்திருந்தது. தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ஆகும்.

- Advertisement -

இந்த திரைப்படத்தை தெலுங்கில் நடிகர் வெங்கடேஷ் மற்றும் த்ரிஷாவை வைத்து செல்வராகவன் எழுதி இயக்கியிருந்தார். அந்த திரைப்படத்தின் கதையை தான் நடிகர் தனுஷ் தமிழில் யாரடி நீ மோகினி என்ற பெயரில் நடித்தார். இந்த திரைப்படத்தை மித்ரா ஜவகர் இயக்கினார்.ஆனால் செல்வராகவன் இயக்காவிட்டாலும் இந்த கதை அவருடையது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நடிகர் தனுஷ் தற்பொழுது முதன்மை நடிகருள் ஒருவராக பலம் வந்து கொண்டிருக்கிறார்.அப்படிப்பட்ட அவர் பல மேடையில் தன் அண்ணனை தன் குரு என்றும் அவரால்தான் நான் இப்பொழுது இப்படி உயர்ந்திருக்கிறேன் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். குறிப்பாக ஒரு மேடையில் தனுஷை பார்த்து தன்னைத்தானே செதுக்கிக் கொண்ட சிற்பம் என்று புகழ்ந்தார்கள்.

ஆனால் அதற்கு தனுஷ் என்னை செதுக்கியது நான் அல்ல என்னுடைய அண்ணன் செல்வராகவன் தான். துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் எல்லாம் எத்தனை முறை கண்ணை சிமிட்ட வேண்டும் என்பதை கூட அவர் தான் எனக்கு கற்றுக் கொடுத்தார் என்று தன் அண்ணனான செல்வராகஅவனை பெருமை படுத்தி இருந்தால் நடிகர் தனுஷ்.

இப்படிப்பட்ட இயக்குனர் செல்வராகவன் தனக்கு நடிக்கவும் தெரியும் என்பதை நிரூபிக்க நடிகராக களம் இறங்கி இருக்கிறார். இயக்குனர் நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக நடிகராக அறிமுகமானார்.

இயக்குனர் செல்வராகவன் அதைத் தொடர்ந்து அவர் சாணிக் காகிதம், பிரகாசுரன்,நானே வருவேன்,பர்கானா போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.செல்வராகவன் கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த ஃபர்கானா திரைப்படத்தின் இவருடைய கதாபாத்திரம் மிரட்டலாக இருந்தது.

அப்பொழுது விஷால் நடித்துக் கொண்டிருக்கும் மார்கண்டினி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடிகர் செல்வராகவன் நடித்து வருகிறார். மேலும் தற்பொழுது புதிதாக ஒரு திரைப்படத்தில் செல்வராகவன் ஹீரோவாக நடிக்கப் போகிறாராம்.அந்த திரைப்படத்தின் உடைய சூட்டிங் தொடங்கிவிட்டது என்ற தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கிறது.

மேலும் இந்த திரைப்படத்தின் செல்வராகவனுடன் இணைந்து யோகி பாபு,சுனில் போன்ற பிரபலங்கள் நடிப்பதாகவும் திரைப்படத்தின் கதாநாயகியாக சரஸ்வதி மேனன் அறிமுகமாக போவதாக கூறப்படுகிறது.

இவர் ராஜு மேனன் என்னுடைய மகள் ஆவார். இந்த திரைப்படத்தை ரங்கநாதன் என்ற இயக்குனர் இயக்க இருக்கிறார். இவர் இந்த திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனராகவே அறிமுகமாக இருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தை பேன் இந்தியன் மொழிகளில் வெளியிட முடிவு செய்து இருக்கிறார்கள்.அதே போல் இது ஒரு அரசியல் கதைகளத்தை கொண்ட திரைப்படம் ஆகும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

அதேபோல் இயக்குனர் செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் 7g ரெயின்போ காலனி போன்ற திரைப்படங்களின் உடைய இரண்டாவது பாகத்தையும் விரைவில் இயக்கப் போகாததாகவும் கூறியிருக்கிறார். அதை போல் தற்பொழுது நடிகர் சந்தானத்தை வைத்து மன்னன் வந்தானடி என்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் இயக்குனர் செல்வராகவன்.

Most Popular