Thursday, May 2, 2024
- Advertisement -
HomeEntertainmentகுட் நைட் இயக்குநருடன் கைகோர்த்த சிவகார்த்திகேயன்.. மாவீரன் போல் ஆக்‌ஷன் கதையாம்.. 2024ல் தொடங்கும் படப்பிடிப்பு

குட் நைட் இயக்குநருடன் கைகோர்த்த சிவகார்த்திகேயன்.. மாவீரன் போல் ஆக்‌ஷன் கதையாம்.. 2024ல் தொடங்கும் படப்பிடிப்பு

நடப்பாண்டில் தமிழ் சினிமாவில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்த சிறிய படங்களில் ஒன்று ”குட் நைட்”. மணிகண்டன், மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் கவர்ந்த படம். சாதாரண மனிதனுக்கு இருக்கும் குறட்டையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைக்கதை யதார்த்தத்திற்கு அருகில் இருந்தது.

- Advertisement -

இதனால் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. ரூ.2 கோடிக்கு தயாரான குட் நைட் திரைப்படம் ரூ.10 கோடிக்கும் மேல் வசூலித்து அசத்தியது. அதேபோல் பாடல்கள், ஓடிடி ரிலீஸ் என்றும் கூடுதல் லாபத்தை ஈட்டி கொடுத்தது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கி இருந்தார்.

இவர் அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைய உள்ளது தெரிய வந்தது. நடிகர் சிவகார்த்திகேயன் குட் நைட் படத்தை பார்த்துவிட்டு விநாயக் சந்திரசேகரனை அழைத்து கதை இருந்தால் கூற சொன்னதாகவும், அப்போது அவர் கூறிய கதை பிடித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வினின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தில் நடித்தார்.

- Advertisement -

அது சிவகார்த்திகேயனுக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்த நிலையில், அடுத்தடுத்து இளம் இயக்குநர்களிடம் கதை கேட்க தொடங்கியுள்ளார். ஏற்கனவே சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். 

- Advertisement -

இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் குட் நைட் படத்தின் இயக்குநர் கதையில் நடிப்பார் என்று பார்க்கப்படுகிறது. ஆனால் அது ஃபீல் குட் படமாக அல்லாமல் மாவீரன் போல் ஆக்‌ஷன் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அடுத்தடுத்த ஆக்‌ஷன் கதைகளில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் உடனடியாக பெரிய மாற்றங்கள் உள்ள கதையில் நடிக்க்க மாட்டார் என்று சொல்லப்படுகிறது. 

Most Popular