Friday, May 3, 2024
- Advertisement -
HomeEntertainmentமுதன்முறையாக குல்லாவை கழட்டி விட்டு வந்த சிவகார்த்திகேயன்… இதுக்குத்தான் இவ்வளவு பில்டப்பா என உச்சு கொட்டும்...

முதன்முறையாக குல்லாவை கழட்டி விட்டு வந்த சிவகார்த்திகேயன்… இதுக்குத்தான் இவ்வளவு பில்டப்பா என உச்சு கொட்டும் ரசிகர்கள்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் சாதித்தவர்களில் முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஆரம்பம் முதலே தமிழ் சினிமா ரசிகர்களின் நாடி ஓட்டத்தை சரியாக பிடித்த சிவகார்த்திகேயன், அவர்களுக்கு ஏற்றவாறு படத்தைக் கொடுத்து தனது இருப்பை தக்க வைத்துக்கொண்டார். இடையே சிறு சறுக்கல்கள் இருந்தாலும், அதிலிருந்து மீண்டு வந்த கதாநாயகன் குடும்பங்கள் போற்றும் ஹீரோவாக உருவெடுத்தார்.

- Advertisement -

சமீபத்தில் டாக்டர் டான் என இரண்டு பிளாக்பஸ்டர் வெற்றிகளை கொடுத்த எஸ் கே, பிரின்ஸ் திரைப்படத்தில் படுதோல்வியை சந்தித்தார். அந்த ஒரு திரைப்படத்தில் கிடைத்த விமர்சனம், அவரது மார்க்கெட்டுக்கே கொஞ்சம் ஆப்பு வைப்பதாக அமைந்தது. இதனால் விழித்துக் கொண்ட நடிகர், மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் கைகோர்த்து மாவீரனில் இணைந்தார்.

கோழையாக இருக்கும் ஒரு இளைஞன் எப்படி மாவீரன் ஆகிறான் என்பதை ஃபேண்டஸி கலந்த கதையுடன் இயக்குனர் கூறி இருந்தார். படத்தின் முதல் பாதி மிக நன்றாகவும், இரண்டாம் பாதி சுமாராக இருப்பதாகவும் விமர்சனம் எழுந்தது. இருப்பினும் யோகி பாபுவின் பேட்ச் ஒர்க் காமெடியால் மாவீரன் க்ளிக் ஆனது. 25 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், எண்பது கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது. இதன் மூலம் மீண்டும் ஒரு வெற்றியை பதிவு செய்த சிவகார்த்திகேயன், தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

- Advertisement -

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தை, கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து முடிந்திருக்கிறது. இதில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடிப்பதாக கூறப்படுகிறது. படத்திற்காக சில மாதங்களாக தனது தலைமுடியை காட்டாமலேயே வலம் வந்தார் சிவகார்த்திகேயன். எங்கு போனாலும் குல்லாவுடன் அவர் வந்ததால், பலரும் இது குறித்து கேள்வி கேட்க, இயக்குனர் கூறியது போல் நான் செயல்படுவதாக தெரிவித்து இருந்தார்.

- Advertisement -

இதனால் சிவகார்த்திகேயன் கெட்டப்பில் மிகப்பெரிய மாற்றம் இருக்கப் போவதாக ரசிகர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில், நடிகர் அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எஸ் கே, குல்லா இல்லாமல் வந்திருந்தார். அவரது ஹேர் ஸ்டைலும் சாதாரணமாகத்தான் இருந்தது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்த ஹேர் ஸ்டைலுக்குதான் இவ்வளவு பில்டப்பா என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். அதே சமயம், சிவகார்த்திகேயன் இருந்த பழைய கெட்டப்பில் ஷூட்டிங் நடந்து முடிந்திருக்கலாம் என்றும் சிலர் ஆருடம் கூறி வருகின்றனர். படம் வெளியே வந்தால் தான் இது குறித்து சொல்ல முடியும் என்று சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Most Popular