சினிமா

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக ரிலீஸ்க்கு காத்திருக்கும் படங்கள்.. முழு பட்டியல் இதோ

தமிழ் சினிமாவில் தற்போதைய நிலை மூச்சு விட முடியாத அளவிற்கு ஒரு ஒரு படமும் ஒன்றின் பின் ஒன்றாக திரையரங்குகளில் வெளியாகி கொண்டே தான் இருக்கிறது. அதை பார்ப்பதற்கு ரசிகர்களும் சற்றும் சலிக்காமல் வெளியிடப்படும் அனைத்து படங்களையும் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

Advertisement

ஆனால் சில படங்கள் சில வருடங்களுக்கு முன்பே தயாரிக்க தொடங்கி இன்று வரை திரையரங்குகளில் வெளியிடப்படாமல் முடங்கிக் கிடக்கிறது. அப்படி வெளியிடப்படாமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கிறது.

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் என்ற திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கியது. பைனான்ஸ் பிரச்சினைகளாலும் மேலும் கொரோனா காரணத்தாலும்  படப்பிடிப்பு தடைப்பட்டது. அதேபோல் இன்று நேற்று நாளை என்று திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஆர் ரவிக்குமாரினுடைய இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் அயலான் திரைப்படமும் 2018 இல் இருந்தே படப்பிடிப்பு தொடங்கி 2020 கொரோனா காலகட்டத்தில் தடை ப்பட்டது.

Advertisement

தனுஷ் நடித்த மாறான் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திக் நவீன் இயக்கத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடித்த நரகாசுரன் என்ற திரைப்படமும் இதுவரை திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படவில்லை. இந்தத் திரைப்படம் 2017 எடுக்க இருப்பதாக இயக்குனர் கார்த்திக் நரேன் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவா, ஷியாம், ஜெய் ஜெயராம் ரம்யா கிருஷ்ணன் ரெஜினா கெசாந்த்ரா போன்ற பல பிரபலங்களை கொண்டு உருவாக்கப்பட்டது பார்ட்டி என்ற திரைப்படம் இந்த திரைப்படத்தினுடைய டீசர் 2017 ஆம் ஆண்டு ஆண்டு வெளியானது.

ஆனால் இன்றுவரை திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படவில்லை. தற்பொழுது நயன்தாரா நடித்த கனெக்ட் என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கிய இரவாக்காலம் என்ற திரைப்படம் இன்று வரை திரையரங்குகளில் வெளியிடப்படவில்லை. இந்த திரைப்படத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் எஸ்பி ஹோஸி மினி இயக்கத்தில் நடிகர் சிவா எம் எஸ் பாஸ்கர் மனோபாலா வி டிவி கணேஷ் போன்றவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது சுமோ என்ற திரைப்படம் திரைப்படம் 2020 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது. ஆனால் இன்று வரை  திரையரங்குகளில் வெளியிடப்படாத திரைப்படம் ஆகும்.

2014 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளிவந்த சதுரங்க வேட்டை திரைப்படத்தின் உடைய அடுத்த பாகம் இயக்குனர் என் வி நிர்மல் குமார் இயக்கத்தில் உருவாக்கப்பட்டது இந்த திரைப்படமும் இதுவரை திரையரங்குகளில் வெளியிடப்படவில்லை.

இப்படி வெளியிடப்படாமல் முடங்கி இருக்கும் இந்த திரைப்படங்கள் எல்லாம் எப்பொழுது திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் சில திரைப்படங்கள் கொரோனா காலத்தில் வழியின்றி தடைப்பட்டு நின்று விட்டது அவையெல்லாம் விரைவில் நிறைவு செய்யப்பட்டு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top