Entertainment

பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழா.. சிறப்பு விருந்தினராக விஜய் பங்கேற்பு? திடீரென வெளியான தகவலால் ரசிகர்கள் உற்சாகம்..!

நடிகர் விஜய் தமிழில் வெளியாகும் பிரமாண்ட படத்தின் விழா ஒன்றில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

விஜய் தற்போதுதான் லியோ படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங்கை முடித்துவிட்டு காஷ்மீரில் இருந்து சென்னைக்கு திரும்பி இருக்கிறார். மொத்த படக்குழுவும் மைனஸ் டிகிரி குளிரில் கஷ்டப்பட்டு ஷூட்டிங்கை முடித்துவிட்டு தற்போது சென்னை வந்த நிலையில் அடுத்து சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படத்தின் ஷூட்டிங் நடக்க இருக்கிறது.

Advertisement

இந்த நிலையில் நடிகர் விஜய் விரைவில் இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு அழைக்கப்பட்டு இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. விஜய் PS2 படத்தின் விழாவில் கலந்துகொள்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

முதலில் பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் விஜய்யை தான் நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தார் மணிரத்னம். ஆனால் படம் பல வருடங்கள் கழித்து தொடங்கியதால் விஜய் அதில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பொன்னியின் செல்வன் 2 படத்தின் ட்ரெய்லர் வரும் 29ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 2ஆம் வாரத்தில் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த லைகா நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

Advertisement

இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு பின் பொன்னியின் செல்வன் படக்குழு இந்தியா முழுவதும் பயணித்து விளம்பரப் பணிகளில் ஈடுபட உள்ளது. அதேபோல் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் விளம்பரப் பணிகளில் ஈடுபட போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top