Tuesday, April 30, 2024
- Advertisement -
Homeசினிமாபொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்து சூர்யா என்கிட்ட இதை தான் சொன்னார் - நடிகர் கார்த்திக்...

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்து சூர்யா என்கிட்ட இதை தான் சொன்னார் – நடிகர் கார்த்திக் பேச்சு

எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி திரைப்படமாக இயங்கியிருந்தார் இயக்குனர் மணி ரத்தினம். லைக்கா நிறுவனம் தயாரித்தது. படத்தில் நடிகர்களாக விக்ரம்,ஜெயம் ரவி,கார்த்திக், பார்த்திபன்,ஐஸ்வர்யா ராய், திரிஷா ஐஸ்வர்யா லட்சுமி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.

- Advertisement -

படத்தின் கதை மிகவும் பெரியது என்பதால் இதை மொத்தமாக ஷூட் செய்து அதை இரண்டு பாகங்களாக வெளியிட முடிவு செய்த படக்குழு முதல் பாகத்தை கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்டது. அதிக வசூலை குவித்து பாராட்டுகளையும் பெற்றது. முதல் பாகத்தில் வந்தயத்தேவனாக நடித்திருந்த கார்த்திக் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் என்று அனைவரிடமும் பாராட்டுகளை பெற்று இருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாகிய திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் வெளியான 2 நாட்களில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. அதில் வந்திய தேவனாக நடித்த நடிகர் கார்த்திக் அவர்கள், அவருடைய சகோதரர் சூர்யா மற்றும் ஜோதிகா படத்தை பார்த்து என்ன சொன்னார்கள் என்பதை கார்த்தி வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

இது குறித்து சூர்யா கூறியுள்ளதை கார்த்திக் கூறும்போது படத்தை பார்த்த சூர்யா தமிழ் சினிமாவால் நிச்சயம் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று பெருமையுடன் கூறினார்.மேலும் படத்தில் நடித்துள்ள மற்ற அனைத்து நடிகர் நடிகைகளையும் பாராட்டி இருந்தார். மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிப்பதற்காக இதயக்கனி எம்ஜிஆர் அவர்கள் நடிகர் சிவகுமாரை அணுகியதையும், நடிகர் கார்த்தி நினைவு கூர்ந்துள்ளார்.

- Advertisement -

நடிகர் சூர்யா அவரது மனைவி ஜோதிகா கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் குடி ஏறி உள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தை சூர்யா,ஜோதிகா மற்றும் அவரது குடும்பத்தினருடன் கண்டுக்களித்தார்.

Most Popular