Friday, April 26, 2024
- Advertisement -
HomeEntertainmentமீண்டும் கேஜிஎப் கதை களத்தில் உருவாகும் திரைப்படம்.. இந்த முறை இணைவது தனுஷ் - வெற்றிமாறனின்...

மீண்டும் கேஜிஎப் கதை களத்தில் உருவாகும் திரைப்படம்.. இந்த முறை இணைவது தனுஷ் – வெற்றிமாறனின் வெற்றிக் கூட்டணி.. அப்போ வட சென்னை பார்ட் 2 என்ன ஆச்சு!

வாத்தி படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். அருண் மாதேஸ் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் தயாராகிறது. இதை அடுத்து தனுஷ் தனது ஐம்பதாவது படத்தை இயக்கி நடிக்க இருக்கிறார்.

- Advertisement -

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, விஷ்ணு விஷால், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு படங்களிலும் நடித்து முடிக்கும் தனுஷ் அடுத்ததாக, கர்ணன் பட இயக்குனர் மாரி செல்வராஜுடன் இணைகிறார். தனுஷின் வொண்டர் பார் நிறுவனமே இந்த படத்தை தயாரிக்கிறது. இது தொடர்ந்து வடசென்னை படத்தில் இரண்டாம் பாகத்திலும் அவர் நடிக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வேறொரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. விடுதலை திரைப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் அடுத்ததாக வாடிவாசல் படத்தை எடுக்க இருக்கிறார். சூர்யா நடிக்கும் இந்த திரைப்படத்தின் பிரீ ப்ரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தை தொடர்ந்து அவர் தனுசுடன் வடசென்னை இரண்டாம் பாகத்தை எடுப்பார் என கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது அவர் தனுசுக்கு வேறொரு கதையை தயார் செய்திருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. முழுக்க முழுக்க கேஜிஎப் களத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாக இருப்பதாகவும், இதற்கான பணியில் வெற்றிமாறன் இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

இதனால் குழம்பி போய் இருக்கும் ரசிகர்கள் வடசென்னை படத்தில் இரண்டாம் பாகம் வருமா வராதா என சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். அனேகமாக வடசென்னை படத்தை முடித்த பிறகு வெற்றிமாறன், தனுஷ் உடன் மீண்டும் இணைந்து இந்த படத்தை எடுப்பார் என கூறப்படுகிறது. ஏற்கனவே கேஜிஎஃப் களத்தை மையப்படுத்தி யஷ் – பிரசாத் நீல் கூட்டணியில் உருவான திரைப்படம், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. விக்ரம் – பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் தங்கலான் திரைப்படமும் கே ஜி எஃப் கதைகளத்திலே எடுக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியும் இதே களத்தைத் தேர்ந்தெடுத்து இருப்பதால், படத்திற்கு மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

- Advertisement -

Most Popular