Thursday, May 2, 2024
- Advertisement -
HomeEntertainmentஎனக்கும் விஜய்-க்கும் போட்டி நிச்சயம் இருக்கு.. என்னை போல் தோல்வி படங்கள் எந்த ஹீரோவும் கொடுத்ததில்லை.....

எனக்கும் விஜய்-க்கும் போட்டி நிச்சயம் இருக்கு.. என்னை போல் தோல்வி படங்கள் எந்த ஹீரோவும் கொடுத்ததில்லை.. அஜித்குமார் பேட்டி

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் – கமல்ஹாசனுக்கு பின் உச்ச நட்சத்திரங்களாக வந்தவர்கள் தான் அஜித் குமார் – விஜய். ரஜினி – கமல் இருவருக்கும் பெரியளவில் மார்க்கெட் இல்லாத சூழலில், தற்போது விஜய் – அஜித் இருவருக்கும் தான் ரசிகர்கள் அதிகளவு இருக்கிறார்கள். இருவரும் ராஜாவின் பார்வையிலே படத்தில் இணைந்து நடித்தாலும், காலப் போக்கில் எதிரிகளை போல் திரையில் போட்டிப் போட்டு கொண்டார்கள். 

- Advertisement -

இதனால் இருதரப்பு ரசிகர்களும் சோஷியல் மீடியாவில் சண்டை போட்டு கொள்வார்கள். தற்போது விஜய் இன்னும் ஒரேயொரு படத்துடன் சினிமாவை விட்டு முழுமையாக விலகி அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார். இதனால் அனில், ஆமை என்று ரசிகர்கள் ஜாலியாக மீம்ஸ் வெளியிட்டு கொண்டாடி வருகிறார்.

இந்த நிலையில் விஜய் உடனான நட்பு மற்றும் போட்டி குறித்து அஜித் குமார் பில்லா படத்தின் ரிலீஸின் போது பேட்டியளித்துள்ளார். அதில், எனக்கும் விஜய்-க்கும் இடையில் போட்டி இருக்கிறதா என்று கேட்டால் நிச்சயம் போட்டி இருக்கிறது. இது சினிமாவின் வளர்ச்சிக்கான ஆரோக்கியமான போட்டி தான். எப்படி எல்லோருக்கும் இடையில் ஒரு போட்டி இருக்குமோ அப்படியான போட்டி நிச்சயம் எங்களுக்குள் இருக்கிறது.

- Advertisement -

ஆனால் விஜய் எப்போதும் எனக்கு எதிரி கிடையாது. பெர்சனலாக எந்த பிரச்சனையும் கிடையாது. என்னை பொறுத்தவரை கமர்ஷியலாக படங்கள் ஹிட் கொடுக்க வேண்டும் என்பதே ஆசை. ஆனால் சமூக கருத்துகள் நிறைந்த படங்களால் கொடுக்க முடியுமா என்று கேட்டால் நிச்சயம் கடினம் தான். நான் சுமாரான படங்கள் கொடுத்துள்ளேன். பிளாப் படங்கள் கொடுத்துள்ளேன். பிளாக்பஸ்டர் படங்களும் கொடுத்துள்ளேன்.

- Advertisement -

ஆனால் ஒருநாளும் ஓடாத ஒரு படத்திற்கு 100 நாட்கள் போஸ்டர் ஒட்டி கொண்டாடியதில்லை. எனது ரசிகர்களும் அப்படி செய்ததில்லை. ஏனென்றால் மக்களுக்கு உண்மை என்ன என்பது தெரியும். பில்லா படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்று யோசனை 3 ஆண்டுகளுக்கு முன்பாக வந்தது. நான் கொடுத்த அளவிற்கு வேறு எந்த நடிகரும் பிளாப் படங்கள் கொடுத்திருந்தால், நிச்சயம் சினிமாவில் இருந்து காணாமல் போயிருப்பார்கள் என்று கூறியுள்ளார்.

Most Popular