Wednesday, May 1, 2024
- Advertisement -
HomeEntertainmentவிஜய் அண்ணா கேரவனுக்குள் அழைத்து சொன்ன அந்த நொடி.. என்னை முதல் படத்திற்கு முன்பே அடையாளம்...

விஜய் அண்ணா கேரவனுக்குள் அழைத்து சொன்ன அந்த நொடி.. என்னை முதல் படத்திற்கு முன்பே அடையாளம் கண்டுவிட்டார்.. அட்லீ சொன்ன கதைகள்!

ஷாரூக் கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடிக்கு வசூல் செய்து சாதனை படைத்தது. பதான் படம் மூலமாக கம்பேக் கொடுத்திருந்தாலும், ஜவான் படமே ஷாரூக் கானின் உண்மையான கம்பேக் என்று பார்க்கப்படுகிறது. இதனால் இயக்குநர் அட்லீ தமிழ் இயக்குநர் என்ற அடையாளத்தில் இருந்து இந்திய அடையாளத்திற்குள் நுழைந்துள்ளார்.

- Advertisement -

இதனால் அட்லீ இயக்கத்தில் நடிக்க இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் தயாராக உள்ளனர். அல்லு அர்ஜூன், மகேஷ் பாபு, சல்மான் கான் உள்ளிட்டோருடன் அடுத்ததாக அட்லீ இணைய வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் மீண்டும் விஜயை இயக்கும் வாய்ப்பும் உள்ளதாக அட்லீ கூறி வருகிறார். 

ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியான தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களை அட்லீ இயக்கினார். அதேபோல் துணை இயக்குநராகவும் விஜய் நடித்த நண்பன் படத்தில் பணியாற்றினார். இந்த நிலையில் நண்பன் படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து அட்லீ கூறும் போது, எந்திரன் படத்தில் ரஜினிகாந்த் உடன் 300 நாட்கள் இணைந்தே பயணித்தேன். அதன்பின் நண்பன் படத்தில் விஜய் சாருடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. 

- Advertisement -

நண்பன் படத்தில் பணியாற்றிய போது விஜய் சார் என்றே அழைத்து வந்தேன். நண்பன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்த போது ஒருமுறை விஜய் சார் என்னை கேரவனுக்குள் அழைத்து சென்றார். அப்போது ஷங்கர் சாருக்கு நீ சிறந்த உதவியாளராக இருக்கிறாய். சீக்கிரமே ஒரு கதை எழுதிவிட்டு என்னிடம் வா. நிச்சயம் நாம் ஒன்றாக படம் செய்யலாம் என்று கூறினார். 

- Advertisement -

அதுவரை எந்த நடிகரும் அதுபோல் என்னிடம் கூறியதில்லை. அப்போது முதல் விஜய் சார் என்பது மாறி, விஜய் அண்ணா என்று கூற தொடங்கிவிட்டேன். விஜய் சார் போன்ற பெரிய நடிகரை முதல் படத்திலேயே கையாள வேண்டாம் என்பதால் தான், ராஜா ராணி படத்தை இயக்கி எனது நம்பிக்கையை அதிகரித்து அடுத்த படத்திற்கு விஜய் அண்ணாவுடன் சென்றதாக கூறியுள்ளார். 

Most Popular