Saturday, May 4, 2024
- Advertisement -
HomeEntertainment50-வது படத்தில் அடியெடுத்து வைத்த விஜய் சேதுபதி… சலூன் கடை நாற்காலியில், கையில் கத்தியுடன் மிரட்டல்...

50-வது படத்தில் அடியெடுத்து வைத்த விஜய் சேதுபதி… சலூன் கடை நாற்காலியில், கையில் கத்தியுடன் மிரட்டல் லுக்… குரங்கு பொம்மை இயக்குனரின் அடுத்த தரமான படைப்பு!

தமிழ் சினிமாவில் யதார்த்த நாயகனாக அறியப்படுபவர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். காலம் கடந்து இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற, விஜய் சேதுபதிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தது பீட்சா திரைப்படம். பின்னர் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் திரைப்படங்களின் மூலம் பலராலும் அறியபட்டார் விஜய் சேதுபதி.

- Advertisement -

இதன் பிறகு தமிழ் சினிமாவில் அவர் நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவர ஆரம்பித்தன. என்ன வாரத்திற்கு ஒரு படத்தை விஜய் சேதுபதி வெளியிடுகிறார் என்றும் பலர் கிண்டல் அடிக்கத் தொடங்கினர். இப்படியான நேரத்தில் நானும் ரவுடிதான், தர்மதுரை போன்ற தரமான திரைப்படங்களையும் விஜய் சேதுபதி கொடுத்தார். கதாநாயக பின்பத்தில் மட்டுமே இருந்த விஜய் சேதுபதிக்கு, ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு பேட்ட திரைப்படத்தின் மூலம் கிடைத்தது. ஆனால் அந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு சரியான வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்று ஒரு பேச்சு எழுந்தது.

இந்தக் குறையை மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் தீர்த்துக் கொண்டார் விஜய் சேதுபதி. பவானி என்னும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அவர், நாயகன் விஜய்யை ஒவ்வொரு காட்சியிலும் அலறவிட்டார். இது ஒரு பக்கம் இருக்க, தெலுங்கு, இந்தி திரையுலகிலும் விஜய் சேதுபதி கால்பதித்துள்ளார். கத்ரீனா கைப்புடன் மேரி கிறிஸ்மஸ் என்னும் படத்தில் அவர் நடித்திருக்கிறார். இந்த படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சமீபத்தில் வெளியான ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்திலும் வில்லனாக விஜய் சேதுபதி மிரட்டி இருக்கிறார்.

- Advertisement -

தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் அவர், இப்போது 50வது படத்தை எட்டி இருக்கிறார். இந்த திரைப்படத்தை குரங்கு பொம்மை படத்தை எடுத்த நிதிலன் இயக்குகிறார். இதில் விஜய் சேதுபதி இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்பும் படத்தில் இருப்பதாக தெரிகிறது.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது படத்தின் முதல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சலூன் கடை நாற்காலியில், உடல் எங்கும் காயம், கையில் கத்தியுடன் மிரட்டலான தோற்றத்தில் விஜய் சேதுபதி இருக்கிறார். இந்த ஒரு புகைப்படமே, படம் தரமாக எடுக்கப்பட்டிருப்பதற்கு உதாரணமாக உள்ளது என்று சினிமா விமர்சனங்கள் கூறி வருகின்றனர்.

Most Popular